எல்லாம் போச்சு… பாகிஸ்தானின் எகத்தாள பேச்சு…!
இந்தியாவை எப்படி சமாளிக்கனுன்னு எங்களுக்குத் தெரியும்!-குறையாத பாக்., பிரதமரின் வாய்க்கொழுப்பு!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயம்டைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. கோட்லி, பகவல்பூர் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகனை தாக்குதல்களை நடத்தியது. அதேபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரை சுற்றியுள்ள மலைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் நள்ளிரவுக்கு பிறகு பலத்த வெடி சப்தங்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதை போர் நடவடிக்கையாகவே கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் ஷபா ஷரீப் தனது அறிக்கையில் இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளார். பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் கோழைத்தனமாக தாக்குதலை எதிரிகள் நடத்தி உள்ளனர். போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது. பலமான பதிலடி கொடுக்கப்படும். முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுத படைகளுடன் நிற்கிறது. பாகிஸ்தான் ஆயுத படைக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் எனக்கூறியுள்ளார்.
மேலும் முழு பாகிஸ்தான் நாட்டின் மன உறுதியும் உங்களுடன் உள்ளதா? இந்தியாவை எப்படி சமாளிப்பது?, எப்படி பதிலடி தருவது என்று எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் தேசமும் பாகிஸ்தான் ஆயுத படைகளும் எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். எதிரி அவர்களின் தீய இலக்குகளில் வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்களின் நோக்கங்கள் வெல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பால் இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ போர் தொடங்கிவிட்டதா என்று ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியா தனது அறிக்கையில் ராணுவ நிலைகளை தாக்கி இருப்பதாக மட்டுமே சொல்லியிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என்று சொன்ன பிறகும் கூட நாங்கள் எதிரிகளை அழித்தொழித்தே தீருவோம் என்று இந்தியாவை குறிப்பிட்டிருக்கிறார் ஷபா ஷரீப்.
இந்திய பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. நமது இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகனைகளை கொண்டுதான் தாக்குதலை நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கையில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக சூளுரைத்திருப்பது, பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணமோ என்ற சந்தேகத்தை பலமாக்குகிறது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற ஒரு குறியீட்டு பெயரில் இரவு நேர துல்லிய தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவிலிருந்தே ஏவுகனைகள் மூலமாக ஒன்பது இடங்கள் தாக்கப்பட்டுள்ளன. நீண்டதூரம் பயணிக்கும் ஏவுகனைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.