உலகம்

உச்சக்கட்ட பதற்றம்… தெருவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள்!

இந்தியாவின் அதிரடி ஆக்‌ஷனால் ஸ்தம்பித்து போன பாகிஸ்தான்…
நெருவுக்கு வந்து போராட ஆரம்பித்த பாகிஸ்தானியர்கள்…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தான் விரைவில் பாலவனமாக மாறக்கூடும் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானியர்கள் அலை, அலையாய் தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் தங்களது பழிவாங்கும் நடவடிக்கைக்காக சொந்த நாட்டு மக்களையே பலி கொடுக்க துணிந்துள்ளதாக பாகிஸ்தானியர்கள் ஆவேசத்துடன் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதனால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பாகிஸ்தானியர்கள் சிந்துவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களுடன் இணைந்து தேசியவாதக் கட்சிகள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இது தீவிர எதிர்ப்பாக மாறியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் முக்கிய சாலைகளில் சரக்கு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள் சிக்கித் தவிக்கின்றன, மூலப்பொருட்கள் கிடைக்காததால் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தால் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் வாகனங்களுடன் சிக்கித் தவிக்கும் நிலைமை மோசமடைவதாக போக்குவரத்து நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. அனைத்து பாகிஸ்தான் சரக்கு போக்குவரத்து சங்கத்தின் நிசார் ஜாஃப்ரி, சுமார் 30,000 லாரிகள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் அசையாமல் ஒரே இடத்தில் சிக்கித் தவிப்பதாகவும், சுமார் 90,000 முதல் 100,000 ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதாகவும் மதிப்பிட்டுள்ளார். இதனால் ஒரு சரக்கு வாகனத்திலேயே சுமார் 10 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் போக்குவரத்து தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கக்கூடும் என்பதால், பாகிஸ்தானில் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட நேரிடும், விலைவாசி ஏற்றத்தால் உள்நாட்டு பொருளாதாரம் பாதிக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள். ஏற்கனவே சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டதால், பாகிஸ்தான் நதிகள் வறண்டு வருகின்றன. பாகிஸ்தான் விவசாயிகளில் பெரும்பகுதியினர் அந்த நதிகளின் நீரையே நம்பியுள்ளதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மிகப்பெரிய உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button