பாகிஸ்தான் உலகத்திற்கு அச்சுறுத்தல் – அணு ஆயுதம் பறிக்கப்பட வேண்டும்! ஓவைசி!

பாகிஸ்தானின் அணு ஆயுதம் பறிக்கப்பட வேண்டும், அது உலக நாடுகளுக்கே அச்சுறுத்தல் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, உலகத்திற்கே அச்சுறுத்தலாக உள்ள பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான சுவராக நாம் உள்ளோம்.
இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை வைத்திருக்க வேண்டுமா என்பது பற்றி உலகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதம் பறிக்கப்பட வேண்டும், அவை அழிக்கப்பட வேண்டும்.
ஸ்ரீ நகரில் மருத்துவமனைகளை தகர்த்துள்ளதன் மூலம் தீமைகளின் உச்சமாக பாகிஸ்தான் உள்ளது.
இந்த நேரத்தில் பாகிஸ்தானின் பொய்ச்பிரச்சாரங்களுக்கு எதிராக, நமது ராணுவத்துடன் நாம் இருப்போம்.
சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர்களை கடனாக வழங்குகின்றது. இது தீவிரவாதத்திற்கு தான் பயன்படும்.
இந்தக் கடனை வழங்குவதற்கு, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் எப்படி ஒப்புதல் அளித்தன.
பிச்சைக்கார நாடான பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியதன் மூலம் IMF அதாவது இண்டர்நேஷனல் மானிடரி பன்ட் இனி இண்டர் நேஷனல் மில்லிடன்ட் பண்டாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைவர்களுக்கு பொருளாதாரமும் தெரியாது, இஸ்லாமும் தெரியாது. ஆனால் அவர்கள் இந்திய முஸ்லீம்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என போதனை செய்கின்றனர். அங்கிருந்து அவர்கள் செய்யும் காரியங்கள் மூலம் இந்தியாவில், இந்து – முஸ்லீம் ஒற்றுமை சீர்குலைகின்றது.
இவ்வாறு உவைசி பேசியுள்ளார்.
=====