பிச்சைகாரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் – சவுதி மன்னர் கடும் கோபம்!

பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் வருடத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23 கோடி. இதில் 3 கோடியே 80 லட்சம் பேர் பிச்சைக்காரர்கள். இது இலங்கையின் மக்கள் தொகையை விட அதிகம். வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுப்பதில் பாகிஸ்தானியர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இதனால் சர்வதேச அரங்கில் தங்களது நாட்டின் பெயர் அவமானப்படுத்தப்படுவதாக பாகிஸ்தான் வேதனைப்பட்டு வருகிறது.இதனையொட்டி, அண்மையில் சவுதி, ஈரான், ஈராக் நாடுகளில் உள்ள புனித தலங்களுக்கு சென்று பிச்சை எடுக்க முயற்சித்த 2000 பிச்சைக்காரர்களின் பாஸ்போர்டுகளை பாகிஸ்தான் ரத்து செய்தது.சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் கைதான 90 சதவீதம் பேர் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன. இவர்களால் தங்களது சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாக அவர்கள் கூறியுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 44 ஆயிரம் பிச்சைக்காரர்களை சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் முல்தானை சவுக்கத் என்ற ஒரு பிச்சைக்காரர், ஒரு கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளார். அவரது பிள்ளைகள் அந்நகரத்தில் உள்ள பணக்காரர்களின் எலைட் பள்ளியில் படிக்கின்றனர். தனது பிள்ளைகள் பெயரில் மட்டும் 1 கோடி ரூபாய்க்கு மேல் இன்சூரன்ஸ் எடுத்துள்ளார்.பாகிஸ்தான் மக்கள் தொகையில் 3 சதவீதம் முதல் 11 சதவீதம் பேர் பிச்சை எடுக்கின்றனர். 12 லட்சம் குழந்தைகள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்கு சவுதி இளவரசர் சல்மான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஹஜ் பயணிகள் என்றபோர்வையில், சவுதிக்கு, பிச்சை எடுக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களை தடுக்காவிட்டால், பிற பாகிஸ்தான் ஹஜ் யாத்திரிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தி விடும் எனக் கூறியுள்ளார்.இதனையடுத்து ஏஜென்சிகளுக்கு கடும் உத்தரவுகளை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது. சில நேரம் பாகிஸ்தான் அதிகாரிகள், விமானங்களில் ஆய்வு செய்து, பிச்சைக்காரர்களை கண்டுபிடித்து, அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில் பிச்சைத் தொழில் வளர்ந்ததற்கான காரணங்களை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளது. அதில் முக்கியமானது, படிக்காத கூலித் தொழிலாளர்கள் சம்பாதிப்பதை விட, பிச்சை எடுப்பவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை 60 சதவீதமாக உள்ளது.பாகிஸ்தானின் இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம், அந்நாட்டு ராணுவம் எனக் கூறப்படுகிறது. நிலையான ஜனநாயக ஆட்சியை அனுமதிக்காமல், அந்நாட்டை ராணுவம் தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
உலக வங்கியிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பெறும் ராணுவத் தலைவர்கள் அதில் பெரும் தொகையை களவாடி விடுகின்றனர். மறுபக்கம் தீவிரவாதத்திற்கு எதிரான போர், தாலிபான்களுக்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு, அமெரிக்காவிடமும் பெருந் தொகையை பெற்று களவாடி விடுகின்றனர். ராணுவத் தளபதிகளின் சொத்து மதிப்பு மலைப்பை ஏற்படுத்துகிறது. ராணுவத் தலைவர்கள் ஒரு சமூகமாக, தங்களுக்குள் வலை பின்னல்களை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து ஊழலில் கொழித்து வருகின்றனர். இதனால் ஜனநாயக ஆட்சி அமைவதை அவர்கள் விரும்புவதில்லை. இதனால் சாதாரண மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.