டிராக்டரை விற்று மேட்ச் பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் பைத்தியம்!

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டிக்கெட் கட்டணம் 2.50 லட்சம்…தனது டிராக்டரை விற்று கிரிக்கெட் பார்த்த பாகிஸ்தான் பைத்தியம்…தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை ஒருபக்கம் சினிமா பிரபலங்களுக்கும், மறுபக்கம் கிரிக்கெட் வீரர்களுக்கும் காணிக்கையாக்குவதை உலகின் பெரும்பகுதி மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுவும் உலக அளவில் கிரிக்கெட் பைத்தியங்கள் அதிக அளவில் உள்ள நாடுகள் என்றால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சொல்லலாம்.
இவர்களை பயன்படுத்தி அந்தந்த நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் நன்றாக பணத்தை சம்பாதிக்கின்றனர். இந்த அமைப்புகள் பெரும்பாலும், அரசிடம் இருந்து விலகி, லாபத்தை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் உயர் குடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது, இந்திய அணி, பாகிஸ்தான் அணி என இவர்கள் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் இவர்கள் அந்நாட்டு அரசுகளுக்கு சொந்தமான அணிகள் இல்லை. தனியார் பண முதலைகளால் நடத்தப்படும் வாரியங்களுக்கு சொந்தமானவர்கள். மான அணிகள் இல்லை.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு பாகிஸ்தானியர் பற்றிய செய்தி வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண்பதற்காக தனது விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த டிராக்டர் ஒன்றை விற்பனை செய்துள்ளார் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர். ஒரு டிக்கெட்டின் விலை 3000 அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.ஆனால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். உண்மையில் பாகிஸ்தான் வென்றிருந்தாலும், அவருக்கு அந்த தொகை நஷ்டம் தான்.இதுபோன்று, கிரிக்கெட், சினிமா மோகத்தால் இளைஞர்கள் பலர் தங்களது உழைப்பை வீணடித்து வருவது குறிப்பிடத்தக்கது.