உலகம்

ஆந்தையுடன் விளையாட ரூ. 1500 கட்டணம்! அபுதாபியில் பிரபலமடைந்து வரும் Owl Cafe!

அபுதாபியில் பிரபலமடைந்து வரும் Owl Cafe
ஆந்தையுடன் விளையாட ரூ.1500 கட்டணம்!
பறவைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு…

துபாயில் பிரபலமடைந்து வரும் Owl Cafe உணவகத்துக்கு பறவைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உணவகங்களில் ஆந்தைகளை காட்சிப் பொருட்களாக வைப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், மத்திய கிழக்கில் முதன்முறையாக அபுதாபியில் முகமது அல் ஷெஹ்ஹி என்பவர் owl cafe ஒன்றை திறந்துள்ளார்.

இங்கு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 9 ஆந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆந்தைக்கும் தனித்தனி ஏ.சி. அறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆமைகளை பராமரிக்க, அதற்காகவே படித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களும் உள்ளனர்.

இந்த ஆந்தைகளுடன் விளையாடுவதற்கு வாடிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக 70 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் ஆகும். FOOD VLOGERS மூலம் இந்த விடுதி பிரபலம் அடைந்து வருகிறது.

அதே நேரம் பறவைகள் நல ஆர்வலர்கள் இந்த உணவு விடுதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு ஆந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, இந்தக் கடை பிற்பகல் 2 மணியளவில் தான் திறக்கப்படுகிறது.

அங்கு ஆந்தைகளும் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் அது ஆந்தைகள் ஓய்வெடுக்கும் நேரம். அப்போது, அவற்றை விழிக்க வைப்பது கொடுமையானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த உணவகம், தங்களிடம் உள்ள ஆமைகளில் சில, கண் பார்வை குறைவு உடையவை. அவற்றால் காடுகளில் வாழ முடியாது. சில ஆந்தைகள் உயரம் பறக்க முடியாதவாறு உடல் பாதிப்புகளை கொண்டுள்ளன.

எனவே தான் அவற்றை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். பார்வையாளர்கள் நீண்ட தொலைவில் இருந்து தான் பார்ப்பார்கள். விளையாட விரும்பினால், பயிற்சியாளர்களின் கண்காணிப்பின் கீழ் தான் அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என விளக்கம் கொடுத்துள்ளனர்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button