ஒரே ஒரு எம்.பி. சீட் மட்டுமே வைத்துக் கொண்டு மோடியை மிரட்டும் குட்டிக் கட்சி!

இணையமைச்சர் பதவி எல்லாம் தேவையில்லை….மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தே தீர வேண்டும்…
மோடி அரசை மிரட்டல் குட்டிக் கட்சி…3வது முறையாக பதவி ஏற்றாலும் மோடிக்கு இந்த முறை பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளையும், உதிரிக் கட்சிகளை நம்பி ஆட்சியை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் என்டிஏ கூட்டணி கட்சிகள் கடும் நிபந்தனைகளை மோடிக்கு விதித்து வருகின்றன.
இந்நிலையில், ஒரே ஒரு மக்களவை எம்.பி.யை மட்டுமே வைத்துள்ள, அஜித் பவார் என்பவரின், பிரிந்து சென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என அடம் பிடித்து வருகிறது.
4 இடங்களில் போட்டியிட்டு, இந்தக் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.இந்தக் கட்சியின் பிரபுல் படேல் என்பவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்தப் பதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர்.
பிரபுல் படேல் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்ததால், மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தான் வேண்டும் என்றும், இணையமைச்சர், துணையமைச்சர் போன்ற ஜுனியர் பதவிகளை ஏற்க முடியாது என கூறியுள்ளனர்.பாஜக தரப்பிலோ, பொறுமையாக காத்திருக்குமாறு, விரைவில் நல்ல முடிவு செய்கிறோம், அதற்குள் அவசரப்படவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின், சகோதரர் மகன் தான் அஜித் பவார். அவர் மீது பல வழக்குகள் இருந்த நிலையில், கடந்த ஆட்சியின் போது, திடீரென கட்சியை உடைத்துக் கொண்டு, பாஜகவுடன் சென்று கூட்டணி அமைத்துக் கொண்டார்.தற்போது, பாஜக மெஜாரிட்டி இடங்களை பெறாததால், கூட்டணி கட்சிகள் தெம்புடன் பாஜகவை மிரட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.