“ஓயிட் கோட் சூட்,” “கூலிங் கிளாஸ்,” “NO பட்டை, குங்குமம்”!

காவி உடை அணியாத வித்தியாசமான சாமியார் போலே பாபா…கோட், சூட் கூலிங் கிளாஸ், என பந்தாவாக பவனி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில், போலே பாபா என்பவரின் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அவர் குறித்து சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் யார் என்ற தேடல் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
வழக்கமாக காவி உடை அணியும் சாமியார்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர் போலே பாபா. வெள்ளை நிற உடைகள், கோட் சூட், கூலிங் கிளாஸ் என பர்சனாலிட்டியை மெய்டெய்ன் செய்யக் கூடியவர்.உத்தரப்பிரதேச காவல்துறையின் உளவுப் பிரிவில் காண்ஸ்டபிளாக சேர்ந்து, தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்ற போலே பாபா 1999 ஆம் ஆண்டு அந்த வேலையில் இருந்து விலகி, தன்னிச்சையாக தன்னை சாமியாராக அறிவித்துக் கொண்டுள்ளார்.சமூக ஊடகம், அச்சு ஊடகம், தொலைக்காட்சி சேனல்கள் எதன் மீதும் நாட்டம் இல்லாமல், கேமராக்களை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார் போலே பாபா.
ஒரு சிலருடன் ஆரம்பித்த அவரது கூட்டங்கள் கடைசியில் லட்சக்கணக்கை எட்டின.அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட, அவர் அமர்வதற்கு, விலை உயர்ந்த மிகப்பெரிய வெள்ளை நிற சோபாக்கள் மற்றும் மெத்தைகள் போடப்பட்டன. அருகே வெண்டிலேட்டர் வசதியுடன் கழிவறையும் கட்டப்பட்டுள்ளது.அதே நேரம் இத்தனை ஆயிரம் மக்கள் கூடும் இந்த இடத்தில் போதிய அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்ததா போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.