உலகம்

அட கடவுளே! இவ்வளவு சொத்து மதிப்பா?

உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார குடும்பம் எலான் மஸ்கின் குடும்பமோ, முகேஷ் அம்பானியின் குடும்பமோ அல்ல, சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பமே உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார குடும்பம்.இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி டாலர் ஆகும்.. இந்திய ரூபாயில் கணக்கெட்டால் ஒரு கோடியே 20 லட்சம் கோடியாகும்.இது பல நாடுகளின் சொத்து மதிப்புகளை விட அதிகம்.

இந்த குடும்பத்தில் 15,000 உறுப்பினர்கள் இருந்தாலும் 2,000 பேர் மட்டுமே பெரும்பான்மையான சொத்துக்களை நிர்வாகிக்கின்றனர்.இதில் குறிப்பாக மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் குடும்பம் மட்டும் ஒன்னரை லட்சம் கோடி ரூபாய் சொத்தை வைத்திருக்கிறார்கள். இதற்குப் பிறகு இளவரசர் அல் வாலித் பின் தலால் என்பவரது குடும்பம் ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்தை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் 2017 ஆம் ஆண்டு இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் இவரது சொத்து மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்த மொத்த அரசு குடும்பத்திற்கும் சொந்தமான குடியிருப்பு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அதை ஹவுஸ் ஆப் சவுத் என்று அழைக்கின்றனர். 1983இல் உருவாக்கப்பட்ட இந்த அரச மாளிகையில் சுமார் ஆயிரம் அறைகள் இருக்கிறது. பாரம்பரியமிக்க நஜாதி கட்டிடக் கலையில் ஒவ்வொரு கட்டிடங்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது.இந்த ஆடம்பர குடியிருப்பில் திரையரங்கு, நீச்சல் குளம், bowling alley என்று சொல்லக்கூடிய கேளிக்கை விளையாட்டுக்கள் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாளிகைக்கு உள்ளேயே மசூதி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.இந்தக் குடியிருப்புக்கு நீட்சியாக சவுதி மன்னர் குடும்பத்திற்கு என பிரத்தியேகமாக அல்-அவ்ஜா பேலஸும் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த மாளிகையின் நேர்த்தி சவுதியின் கட்டிடக்கலையை பரைசாற்றுவதாக சவுதியின் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.மேலும் இந்த மாளிகைகளை அழகு படுத்த பாரம்பரிய இஸ்லாமிய கலைப் பொருட்களை பயன் படுத்தி உள்ளனர். உலக அளவில் புகழ்பெற்ற பல கலைப் பொருட்களையும் சவுதியின் அரச குடும்பம் தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளது. குறிப்பாக லியானாடோ டாவின்சியின் கைவண்ணத்தில் வரையப்பட்ட SALVATOR MUNDI எனப்படும் ஓவியத்தை சுமார் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர்.

இதேபோல pablo picasso எனப்படும் ஓவியத்தை 1350 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இதுபோக அரச குடும்பத்திற்கென பிரத்தியேகமான பிரைவேட் ஜெட்டுகள் ஆடம்பரக் கப்பல்களும் இருக்கின்றன.தற்பொழுது இருக்கிற பட்டத்து இளவரசரான முஹம்மத் பின் சல்மானுக்கு 3500 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிரம்மாண்டமான ஆடம்பர கப்பல் ஒன்று இருக்கிறது. இதில் இரண்டு கெலிப்பேடுகள், கப்பலுக்கு உள்ளேயே கடல் நீரை பயன்படுத்தும் நீச்சல் குளம், கடல் வெப்பத்தை தணிக்கும் SNOW ROOM போன்ற ஆடம்பர வசதிகள் கப்பலில் செய்யப்பட்டிருக்கிறது.

இதே போல மற்றொரு இளவரசரான அப்துல் அஜீஸ்க்கு தனியாக ஒரு ஆடம்பர கப்பல் இருக்கிறது. இந்த கப்பலில் ஜிம், நீச்சல் குளம் வசதிகளுடன் 64 விருந்தினர்களை தங்க வைக்கக்கூடிய ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.இதைத் தவிர உலகில் உள்ள அனைத்து ஆடம்பர சூப்பர் கார்களையும் சவுதி அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கின்றனர். குறிப்பாக தங்க முலாம் பூசப்பட்ட Lamborghini aventor SV, Rolls-Royce Phantom coupe, Lamborghini aventador super Velonce போன்ற ஆடம்பர கார்களை வைத்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பணக்கார குடும்பமாக குவைத் அரச குடும்பம் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button