உலகம்

ஆக்கிரமிப்பு அறிவிப்பு

வடக்கு காசாவில் நடைபெற்ற சண்டையில் தங்கள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும் ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது.கொல்லப்பட்டவரின் பெயர் நோவம் இஸ்ரேல் அப்து, என்றும் இவர் செர்ஜன்ட் எனப்படும் தரவரிசையில் உள்ளவர் என கூறப்பட்டுள்ளது. மற்றொரு வீரரும் ஒரே சம்பவத்தில் காயம் அடைந்துள்ளதாக ஆக்கிரமிப்பு ராணுவம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, காசா தரை வழிச் சண்டையில் கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பு வீரர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அலெக்ஸாண்டிரோனி, படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு ஆக்கிரமிப்பு வீரர், லெபனான் எல்லையில் காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் தரப்பில் ஏற்படும் உயிரிழப்புகள், காயங்கள் ஆகியவை முழுமையாக வெளியிடப்படுவதில்லை என பார்க்கப்படுகிறது. தங்கள் தரப்பு தோல்வியை மறைக்க இவ்வாறு ஆடிட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button