அணு சக்தி நடவடிக்கைகள் குறித்து ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரானின் அதிரடியால் ஆடிப்போன உலக நாடுகள்…
தாக்குதல்கள் இருந்தபோதிலும் ஈரானின் அணுசக்தி திட்டத்தில் எந்த இடைவெளியும் இல்லை ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தாலும், மற்றொருபுறம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அட்டாக் செய்தாலும், அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகள் எவ்வித இடையூறும் இல்லாமல் தொடரும் என ஈரானின் அணுசக்தித் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
செவ்வாய் அன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி, அணு உலைகளின் செயல்பாடுகளை பராமரிக்கவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சேதத்தை மதிப்பிடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைக் கடுமையாக கண்டித்தார். மேலும் நாட்டின் அணுசக்தி உற்பத்தியில் எந்த இடையூறும் ஏற்படாமல் தொடரும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.