உலகம்

வெற்றி கிடைக்கவில்லை – பெரும்பான்மையினர் கருத்து!

ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் தோல்வியடைந்து விட்டது அல்லது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தெரிவித்துள்ளதாக, அந்நாட்டின் கன் ரேடியோ ஊடகம் நடத்திய வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

காசா எல்லை அருகே உள்ள இஸ்ரேலிய பகுதிகளில் இனி வசிக்கப் போவதில்லை என பெரும்பான்மையான யூதர்கள் தெரிவித்துள்ளனர். போர் முடிந்தாலும், அந்தப் பகுதிகளுக்கு செல்லப் போவதில்லை என கூறியுள்ளனர்.27 சதவீத இஸ்ரேலியர்கள், இந்தப் போரில் தங்கள் நாட்டிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர், இந்தப் போரில் இஸ்ரேல் தோற்று விட்டதாக கூறியுள்ளனர். 38 சதவீதம் பேர், வெற்றியா, தோல்வியா என்ற முடிவுக்கு வர முடியவில்லை என கூறியுள்ளனர்.

இஸ்ரேல் ஆளும் கட்சி கூட்டணியினர் 47 சதவீதம் பேர், இந்தப் போரில் இஸ்ரேல் வென்று விட்டதாக கூறியுள்ளனர். அதே நேரம் எதிர்கட்சி வாக்காளர்களில் 48 சதவீதம் பேர், இந்தப் போரில் இஸ்ரேல் தோற்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.போர் முடிந்த பிறகு, காசா எல்லை அருகே உள்ள தங்களது வீடுகளுக்கு திரும்புவோம் என வெறும் 14 சதவீதம் இஸ்ரேலியர்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். 86 சதவீதம் பேர் தங்களது வீடுகளுக்கு ஒரு போதும் திரும்பப் போவதில்லை என கூறியுள்ளனர்.யூதர்களுக்கு உலகில் பாதுகாப்பான ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இஸ்ரேல், அதன் நோக்கங்களில் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button