அது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியே கிடையாது… அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்…!

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பேரூரில் ஆதினம் நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் தானும் கலந்து கொண்டது, ஒரு தற்செயலான நிகழ்வு என விளக்கம் அளித்தார். ஆதினம் தரப்பு, தனக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் அழைப்பு கொடுத்ததாகவும், அதனால் அவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்தார்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும், அதிமுகவின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அழைப்புக் கொடுக்கவில்லை என்றார்.
மேலும் கோவை சிறுவாணி அணையை தூர்வார கடந்த ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திமுக அரசு கிடப்பில் போட்டு, கோவை மக்களை வஞ்சித்துள்ளதாகவும் 50 அடி நீரை தேக்கிய நிலையில், தற்போது, அதில் இருந்தும் 5 அடி குறைத்துள்ளார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையொட்டி, எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி பெற்று 10 நாட்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆர்.எஸ் பாரதி கூறிய கருத்துக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, அவர் எப்போது பேசினாலும் பொய் மட்டும் தான் பேசுவார் எனவும் ஆர்.எஸ்.பாரதி என்ன? நடக்கிறது என்பது பார்த்து பேச வேண்டும் எனவும் முருகன் மாநாட்டுக்கு எங்களது முன்னாள் அமைச்சர்கள் சென்றார்கள், அழைப்பு கொடுத்ததால் சென்றார்கள், அங்க போகும் போது அண்ணா குறித்தோ, பெரியார் குறித்தோ வீடியோ வெளியாவது தெரியாது. எனவும் முருகன் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு, முருகன் மாநாட்டுக்கு சென்றதில் தவறு இல்லை என தெரிவித்தார்.
ஆர்.எஸ்.பாரதி 1999 ல் பா.ஜ.க கூட்டணியில் இருந்த்த போது தெரியாதா ? என கேள்வி எழுப்பிய எஸ்.பி.வேலுமணி கடந்த 2024 – தேர்தலின் போது அண்ணா குறித்து பேசியதற்கு எவ்வாறான துணிச்சலான முடிவு எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூட்டணி வேறு, கொள்கை வேறு. குறிப்பாக எங்களது தலைவர் எடப்பாடி கொள்கையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார் எனவும் வஃகு போர்டு சட்டம் வரும் போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, கூட்டணி எதிராக வாக்களித்தை சுட்டிக்காட்டினார்.
நாங்கள் தேர்தலுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். ஆனால் என்றைக்கும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் அ.தி.மு.க எப்போதும் எடப்பாடி தலைமையில் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை இயக்கமாக இருக்கும் எனவும் இன்னும் அதிகமான கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும், அப்போது தெரியும் என தெரிவித்தார்.