வெளிநாட்டில் இருந்து எந்த அமைதிப்படையும் தேவையில்லை – ஹமாஸ் திட்டவட்டம்!

காசாவில் வெளிநாட்டு அமைதிப் படைகளுக்கு எந்த தேவையுமில்லை…
பாலஸ்தீனியர்களே தங்கள் நிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்…
முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலை தடுப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என ஹமாஸ் அழைப்பு…
காசா மீது 273வது நாளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை நடத்தி வருகிறது. இதனை தடுக்க அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளால் முடியவில்லை. ஈரான் மற்றும் அதன் கூட்டணி படைகள் மட்டுமே இஸ்ரேலை எதிர்த்து போரிட்டு வருகின்றன.
இந்த நிலையில், மலேசியா, இந்தோனேஷியா போன்ற முஸ்லீம் நாடுகள் பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படைகளை அனுப்ப தயார் என அறிவித்துள்ளன.
இதே போல் எகிப்து, ஜோர்டான் நாடுகளின் அமைதிப் படை காசாவில் நிலைநிறுத்தப்படுவதற்கு அமெரிக்காவும் இசைவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
காசாவில் வெளிநாட்டுப் படைகளை நிலை நிறுத்தும் எந்த திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்க தயாராக இல்லை.
காசாவை நிர்வகிக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க பாலஸ்தீனியர்களை சார்ந்தது. பாலஸ்தீனியர்களுக்கு எந்த விதமான வெளிநாட்டு பாதுகாவலர்களும் தேவையில்லை.
பாதுகாப்பு சமநிலையை மாற்ற நாங்கள் விரும்பவில்லை. எங்கள் நாட்டை எங்களால் பாதுகாக்க முடியும்.
அரபு நாடுகளோ, முஸ்லீம் நாடுகளோ எங்களுக்கு நல்லது செய்ய விரும்பினால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதலை நிறுத்த முயற்சி செய்யப்பட்டும் என ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
=====