புதிய சம்பவம்

இஸ்ரேலால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கோலான் குன்றுகள் மீது ஈராக் படை நடத்திய 2 ட்ரோன் தாக்குதல்களில், 2 ராணுவத்தினர் பலியானதாகவும், 24 பேர் படுகாயம் அடைந்ததாகவும் இஸ்ரேல் படை கூறியிருக்கிறது.இந்த ட்ரோன் தாக்குதலில் முதல் ட்ரோனை இஸ்ரேலின் அயன் டோம்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டாவது ட்ரோனை கணிக்க அயன் டோம் தவறிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
இதனால் ஈராக்கில் இருந்து ஏவிய 2வது ட்ரோன் வெற்றிகரமாக இஸ்ரேலின் கோலாண் ஹைட்ஸ் பகுதியை தாக்கியது.2வது ட்ரோன் தாக்குதலை அயர்ன் டோம் கணிக்க தவறியதால் அந்தப் பகுதியில் எச்சரிக்கை அலாரங்கள் ஒலிக்கவில்லை. இதனாலேயே கோலன் ஹைட்ஸ் பகுதியில் இருந்த இஸ்ரேலின் 13வது படைப்பிரிவு ட்ரோன் தாக்குதலிலிருந்து தப்பிக்க பதுங்கு குழிக்கு செல்ல போதுமான நேரம் இல்லாமல் போனதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
இதன் காரணமாக ஈராக்கின் தாக்குதலை நேரடியாக எதிர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு இருந்ததாதக இஸ்ரேல் கூறி இருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் இஸ்ரேல் ஊடகங்கள் அயன் டோம்கள் தாக்குதலை கணிக்கத் தவறியது தான் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானதற்கு காரணம் என்று கூறியிருக்கிறது.ஈராக் இஸ்லாமிய எதிர்ப்பு படை நடத்திய வெற்றிகரமான இந்த தாக்குதலை ஹமாஸின் செய்தி தொடர்பாளர் அபு உபைதா வெகுவாக பாராட்டியுள்ளார்.ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் வரையில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டே தீரும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஈராக் இஸ்லாமிய எதிர்ப்பு படை கூறுகையில் வடக்கு ஆக்கிரமிப்பு இஸ்ரலில் உள்ள கோலான் ஹைட்ஸ் மற்றும் தபர்ரிய பகுதியில் உள்ள இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,
ஆக்கிரமிப்பு இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் லெபனான் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறதுமேலும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறது.