ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மீண்டும் மிரட்டல் விடும் இயற்கை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை…துபாயில் இருந்து 13 விமானங்கள் ரத்து…
அபுதாபியில் சாலைகளில் மீண்டும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழை, இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிலையில், தற்போது, மீண்டும் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழைப் பெய்யத் தொடங்கியுள்ளது.
துபாய் விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை புறப்பட வேண்டிய 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு தரையிறங்க வேண்டிய 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதே போல், அபுதாபி, ஷார்ஜா, மற்றும் ராசல் அல் கைமாவில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்படும் என ஏர் அரேபியா விமான நிறுவனம் பயணிகளுக்கு தெரிவித்துள்ளது.
துபாய் – ஷார்ஜா இடையேயான இன்டர்சிட்டி பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அபுதாபி சாலைகளில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.ஜெபல் அலி பகுதியில் கடும் சூறைக்காற்று வீசியதால், மரங்கள் வேரோடு பிடுங்கி விழுவதை போல் ஆட்டம் கண்டன.