முத்தலிப் விலகல் – சவுக்கு கைது – வழியில் விபத்து! நடந்தது என்ன?

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது…கொண்டு செல்லும் வழியில் சாலை விபத்தில் காயம்…திமுகவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்து வரும் யூ டியூபர் சவுக்கு சங்கர் தேனியில் திடீரென கைது செய்யப்பட்டார்.
ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஐ.பி.எஸ் அதிகாரி அருண் என்பவரை ஒருமையிலும், இழிவுபடுத்தும் வார்த்தையிலும் சவுக்கு சங்கர் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோவை சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது 294 பி அதாவது, பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துதல்,பிரிவு 509 அதாவது, ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வார்த்தைகளை பயன்படுத்துதல்,
அடுத்ததாக பிரிவு 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும்
தமிழ்நாடு அரசு பெண்கள் பணியிட பாதுகாப்புச் சட்டம் பிரிவு 4,
அதே போல், ஆபாசக் கருத்துக்களை எலெக்ரிக் கருவிகள் மூலம் வெளியிடும், ஐ.டி. பிரிவு சட்டம் 2000 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சில பிரிவுகள் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வழி செய்பவை,
அதே போல் பணியிட பெண்கள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 4 பிணை மறுப்பு பிரிவாகும்.
எனவே சவுக்கு சங்கருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காது என கூறப்படுகிறது.
இதனிடையே சங்கரை தேனியில் இருந்து, கோவைக்கு போலீசார் அழைத்துக் கொண்டு வந்த போது, தாராபுரம் அருகே போலீஸ் வாகனம் மீது லாரி மோதியுள்ளது. இதில் போலீஸ் வாகனத்தில் இருந்த காவலர்கள் உட்பட பலரும் இலோன காயம் அடைந்துள்ளனர். இதில் சவுக்கு சங்கருக்கும் இலேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்கள் அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 30ஆம் தேதி சவுக்கு மீடியாவின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து, அப்துல் முத்தலிப் விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.