உலகம்

காசா மக்களை ஆதரிக்காத முஸ்லீம் நாடுகள், செத்த பிணங்களுக்குச் சமம் – ஹிஸ்புல்லா தலைவர் சூளுரை!

காசா மக்களின் நியாயமான போராட்டத்திற்கு பின் நிற்காதவர்கள் பிணங்களுக்குச் சமமானவர்கள்…
அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளை விளாசிய ஹிஸ்புல்லாத் தலைவர்…
எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாலஸ்தீனியர்களை கைவிட மாட்டோம் என சூளுரை…

தலைவர்கள் கொல்லப்பட்டாலும் சரி, அவர்கள் வீடுகள் மீது குண்டுகள் விழுந்தாலும் சரி, ஒரு போதும், பாலஸ்தீனிய ஆதரவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என ஹிஸ்புல்லா செக்ரட்ரி ஜெனரல் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டில் அசூரா கவுன்சிலில் பேசிய அவர், உங்களால் எந்த வகைகளில் பாலஸ்தீனை ஆதரிக்க முடியுமோ, அந்த வகைகளில் ஆதரியுங்கள்.

காசா மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டுகொள்ளாதவர்கள், காசா மக்களுக்கு ஆதரவாக நிற்காதவர்கள், காசாவுக்காக போரிட்டு வரும் ஹிஸ்புல்லா, ஹவுத்திப்படைகளை ஆதரிக்காதவர்கள், இறந்த பிணங்களுக்கு சமமானவர்கள். அவர்களின் உடல் மட்டுமே இயங்குகிறது, இதயமும், ஆன்மாமும் மரித்து விட்டது என அமெரிக்க ஆதரவு முஸ்லீம் அரபு நாடுகளை கடுமையாக சாடினார்.

காசா மக்களுக்கு ஆதரவான எங்களது இந்த போரானது, கொள்கை அடிப்படையிலானது, கருத்தியல் அடிப்படையிலானது, ஆன்மாவை திருப்திபடுத்துவது, தீர்க்கமான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் நிகழ்த்தியுள்ள இந்த கொடூரங்கள், மேற்கு நாடுகளைச் சேர்ந்த மனித நேயம் கொண்ட மக்களிடத்திலும், அமெரிக்க மாணவர் சமூகத்திடமும் பெறும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஹிஜிரி ஆண்டானது, நமது லட்சியங்கள் நிறைவேறும் ஆண்டாகவும், நமது வலிகள் தீரும் ஆண்டாகவும், நமக்கு வெற்றி கிடைக்கும் ஆண்டாகவும் இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button