இந்தியா

மும்பை சம்பவம்! இப்படியும் நடக்குமா?

மும்பையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தன்னை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தன்னை பலாத்காரம் செய்துவிட்டு, மயக்கமடைந்த நிலையில், ஆட்டோவில் ஏற்றிச் சென்று, கோவில் ஒன்றின் வாசலில் போட்டு விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்த போது, பெண் உறுப்பில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடுகள், கற்கள் இருந்ததால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ஆளும் பாஜகவிற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் தெரிவித்த சில தகவல்கள் மாபெரும் திருப்பமாக அமைந்துள்ளன.

அந்த பெண்ணின் விருப்பத்தின் பேரிலேயே ஆட்டோ ஓட்டுநர் அவரை பலாத்காரம் செய்ததாகவும், மேலும், அந்த பெண், இரவு முழுவதும் வீட்டிற்கு செல்லாமல் இருந்ததால், பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என பயந்து ஒரு நாடகம் ஆடியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.அந்த பெண் தானாவே பிளேடுகள், கற்களை தனது பெண்ணுறுப்பில் செலுத்தி, மருத்துவமனைக்கு சென்று நாடகம் ஆடியதாக தெரிவித்துள்ளனர். இதனை சமூக வலைதள வாசிகள் பலரும் ஏற்க மறுத்துள்ளதோடு, அரசியல் நெருக்கடியை சமாளிக்கவே, இப்படி பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்தப்பட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button