Uncategorized

ம.பி. மக்களின் பொது அறிவு – வியக்கும் உலகம்!

விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த சாவ்வா என்ற பாலிவுட் திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள புர்கான்பூர் கோட்டையில், தங்கப் புதையல் இருப்பதாக காட்டப்பட்டிருக்கும்.இந்நிலையில் இந்த திரைப்படக் காட்சிகளை உண்மை என நம்பி, அப்பகுதியில் இருக்கும் மக்கள் கடப்பாரை, மம்முட்டி, ஹெட்லைட், சல்லடையுடன் அந்த கோட்டை இருந்த பகுதிக்குச் சென்று தீவிர தங்க வேட்டையில் ஈடுபட்டனர்.அவர்களின் பாதுகாப்புக்காக அங்கு போலீசும் குவிக்கப்பட்டது.


மாலை 7 மணிக்கு தேட ஆரம்பித்தவர்கள், நள்ளிரவு 3 மணி வரை தேடியும், தங்கத்திற்கு பதில் வெண்கல கின்னம் கூட கிடைக்கவில்லை. இதில் சில படித்த அறிவாளிகள் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு போய் தேடியுள்ளனர்.
அந்தத் திரைப்படமே முதலில் உண்மை வரலாற்றுடன் கட்டுக்கதைகளை போட்டு, வழக்கமாக எடுக்கப்பட்ட ஒரு படம் ஆகும்.அதே நேரம் அவர்கள் தோண்டிய பகுதி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். அங்கு சட்டவிரோதமாகச் சென்று, இப்படித் தோண்டியுள்ளனர்.இதனைப் பார்த்த பல தென்னிந்திய நெட்டிசன்கள்… இதுக்கு தான் படிங்கடா படிங்கடானு அடிச்சுக்கிட்டேன் என்ற, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசனங்களை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button