தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 1000க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த பயிற்சியாளர்!

மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் டாக்டர் ரென்ஷி கார்த்திகேயன் கடந்த 25 வருடத்திற்கு மேலாக கராத்தே மாணவர்களுக்கு கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் அகடாமி மூலம் கராத்தே கற்று கொடுத்து வருகின்றார்.
கார்த்திகேயன் கடந்த 25 ஆண்டு கால அனுபவத்தில் இண்டர்நேசனல், நேஷனல் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சுமார் 45 பதக்கங்களை வென்றுள்ளார்.அதேபோல் 2008 ஆம் ஆண்டு சிறந்த கராத்தே நடுவர் விருதும், 2018 ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் விருதும், 2022ம் ஆண்டு மேஸ்ட்ரோ விருதும் பெற்றுள்ளார்.மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இண்டர்நேஷனல் பதக்கம் வென்றுள்ளார்.
அதேபோன்று தன்னுடைய கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் அகடாமி மூலமும் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட கராத்தே சாம்பியன்களை உருவாக்கி உள்ளார்.தனது பயிற்சி மையத்தில் கராத்தே கற்று வரும் மாணவர்கள் 13 பேர் சர்வதேச அளவிலும், 19 பேர் தேசிய அளவிலும், 17 பேர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று 351 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 1068 மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தநிலையில் ரென்ஷி கார்த்திகேயனுக்கு சென்னையில் அக்ஸ்பா பல்கலைகழகம் நடத்திய பட்டமளிப்பு விழாவில் மார்ஷல் ஆர்ட்ஸ் பிரிவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.ரென்ஷி கார்த்திகேயன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தன்னுடைய மாணவர்களை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வைத்து வெற்றி பதக்கம் பெறுவதே தனது பெரிய இலக்கு என்றார்.