திங்கட்கிழமை 11 நடவடிக்கைகள்

லெபனான் – இஸ்ரேல் எல்லையில் UNIFIL எனப்படும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைதிப்படை பாதுகாப்பு பணியில் உள்ளது. இந்நிலையில், Maroun al-Ras நகரத்திற்குள் ஊடுருவ இஸ்ரேல் முயற்சித்ததை அறிந்து, அவர்களை குறிவைத்து தாக்க படைகளை அனுப்பியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. அப்போது, அமைதிப் படைகள் தங்கிருக்கும் இடம் அருகே இந்த ஊடுருவல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமைதிப்படையினர் மீது தாக்குதல் நடத்தும் சூழல் ஏற்பட்டதால், உடனடியாக, அங்கிருந்து ஹிஸ்புல்லா படைகள் திரும்பப் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது
ஐ.நா. அமைதிப்படை மீது, ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இஸ்ரேல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதோடு, அது முறியடிக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா ராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, திங்கட்கிழமை ஒரே நாளில் 11 முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹிஸ்புல்லா பட்டியல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் Nimra military base, Jal al-Alam site, Karmiel செட்டில்மென்ட், Kfar Vradim(கஃபர் ரடிம்) செட்டில்மென்ட், Qalaat Hill பகுதியில் உள்ள இஸ்ரேலிய ராணுவ மையங்கள், Beit Hillel பகுதியில் உள்ள இஸ்ரேலிய ராணுவ assembly point, Tallat al-Tayhat என்ற இடத்தில் உள்ள assembly points உள்ளிட்ட இடங்களை தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.மிக முக்கிய நடவடிக்கையாக டெல் அவிவிவ் புறநகரில் உள்ள இஸ்ரேல் ராணுவ உளவுத்துறையான 8200 யூனிட்டின் தலைமை அலுவலகத்தை குறிவைத்தும் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.