“மோடி சொல்வது பொய்” இந்துக்களை ராகுல் தவறாக பேசவில்லை – சங்கராச்சாரியார்!

ராகுல் காந்தியின் முழுப் பேச்சையும் கேட்டேன்…
அவர் இந்துக்களை தவறாக பேசவில்லை…
மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சங்கராச்சாரியார்…
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி இந்துக்கள் அனைவரையும் வன்முறையாளர்கள் என பேசிவிட்டதாக பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலரும் அவதூறு பரப்பி வருகின்றனர். இதனை சங்கராச்சாரியார் கண்டித்துள்ளார்.
இந்து மதம் வெறுப்பை விதைக்க வேண்டாம் என சொல்கிறது, இந்து மதம் பிறறை அச்சுறுத்தி பயத்தை விதைக்க வேண்டாம் என சொல்கிறது. ஆனால் தங்களை இந்துக்களின் பிரதிநிதியாக முன்நிறுத்தும் சிலர், பிற மக்களை அச்சுறுத்துகின்றனர். வெறுப்பை பரப்பி வருகின்றனர் என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார்.
ஆனால், இதனை பொதுமக்களிடம் தவறாக சித்தரிக்கும் வகையில், ராகுல்காந்தி, ஒட்டுமொத்த இந்துக்களையும் தவறாக பேசிவிட்டார் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பலரும் அவதூறுக் கருத்துக்களை பரப்பினர்.
இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வர் ஆனந்தா, ராகுல்காந்தி இந்து மதத்தை பற்றி தவறாக எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சங்கராச்சாரியார், ராகுல்காந்தியின் முழுப் பேச்சையும் கேட்டேன். திட்டவட்டமாக அவர் இந்து மதத்தை பற்றி தவறாக பேசவில்லை. அவர் பேசியதை தவறாக சித்தரித்து, ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி, பரப்புகின்றனர். இது நன்னெறிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு சங்கராச்சாரியர், பிரதமர் மோடிக்கு மாற்றமாகவும், ராகுல்காந்திக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை.
=====