
இந்தோனேஷிவின் சுமத்ரா உரங்குட்டான் ஒன்று தனது கன்னத்தில் ஏற்பட்ட காயத்திற்கு, தானே மூலிகை மருந்து கண்டுபிடித்து, குணப்படுத்திய நிகழ்வு, விலங்கியல் மருத்துவர்களையே ஆச்சர்யப்படுத்திய நிலையில், உரங்குட்டான்கள் பற்றிய மேலும் பல சுவாரஸ்யத் தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
மலேசியா, புருணே, இந்தோனேஷியாவில் மட்டுமே உரங்குட்டான்கள் வாழ்ந்துவருகின்றனமலேசிய மொழியில் உரங் குட்டான் என்ற வார்த்தைக்கு காட்டு மனிதர்கள் என்று பொருள். உரங்குட்டான்களின் கால்களை விட, கைகள் நீளமானவை.
உரங்குட்டான்கள் குச்சிகளை கருவிகளாக மாற்றி, தங்களது பயன்பாடுகளுக்கு வைத்துக் கொள்கின்றன. குறிப்பாக நீரின் ஆழத்தை பார்ப்பதற்கும், பழங்களின் விதைகளை தோண்டி எடுப்பதற்கும், தேனை பருகுவதற்கும் குச்சிகளை ஆயுதமாக மாற்றி பயன்படுத்துகின்றன.
ஆண், பெண் உரங்குட்டான்கள் 15 வயதில் பாலியல் சேர்க்கைக்கு தயாராகின்றன. ஆண் உரங்குட்டான்கள் பாலியல் சேர்க்கைக்கு தயாரானதை அறிவிக்க, தனது கன்னத்தை பெருக்கி, உரு மாற்றிக் கொள்கிறது. கழுத்துக்கு கீழும், வளையம் போன்று, சதையை பெருக்கிக் கொள்கிறது.
பெண் உரக்குட்டான்கள் ஒரு முறை ஒரு குட்டியை மட்டுமே ஈனுகின்றன. இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பது, அரிதிலும் அரிதான நிகழ்வு. ஒரு முறை பிரசவித்து விட்டால் அடுத்தது, 6 முதல் 12 வருடங்களுக்கு பிறகே அடுத்து கருவுறுதலுக்கு உரங்குட்டான்கள் தயாராகின்றன.
அதன் மொத்த வாழ் நாளே, வெறும் 30 வருடங்கள் தான். எனவே ஒரு உரங்குட்டான் தனது வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே கருவுறுகிறது. இதன் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.குறைவான குட்டிகளை மட்டுமே ஈனுவதால் உரக்குட்டான்கள் குட்டிகளை கொல்வதில்லை.
பத்திரமாக பாதுகாத்து வருகின்றன. 2 ஆண்டுகள் வரை தாயுடன் தான் குட்டிகள் வாழ்கின்றன. அதே நேரம் 8 ஆண்டுகள் வரை குட்டிகளுக்கு தாய் பாலூட்டுகிறது.
இதன்காரணமாக உடனடி இனப்பெருக்கம் நடைபெறுவதில்லை. உரங்குட்டான்களின் கூடு சிறப்பு வாய்ந்தது.
தங்கள் கூடுகளுக்கு மேல் வெயில் மற்றும் மழை பாதிப்பு ஏற்படாதவாறு, இலைகள் மூலம் பாதுகாப்பு மேற்கூரையை ஒரங்குட்டான்கள் ஏற்படுத்துகின்றன. இதுமட்டுமன்றி தலையணை, போர்வை போன்ற அமைப்புகளையும் இலைகளை கொண்டு உருவாக்குகின்றன.
சாலைகள், பாமாயில் தோட்டம், காடுகள் அழிப்பு நடவடிக்கையால் அழிந்து வரும் இனமான உரங்குட்டான்கள், தொடர்ந்து தங்களது வாழ்விடங்களை இழந்து வருகின்றன. வேட்டை, செல்ல பிராணிகளாக பிடித்துச் செல்லப்படுதல் போன்றவற்றாலும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன.
தற்போது, புருனே மற்றும் இந்தோனேஷியாவின் சுமத்ராவில் மட்டுமே அதிகளவு காணப்படுகின்றன