உலகம்

லட்சம் பேர் தயார்!

கடந்த ஒரு வாரத்தில் ஹிஸ்புல்லா, ஏமன், ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல்களை விட, ஈராக் குழு முதன் முறையாக மாபெரும் தாக்குதல் ஒன்றை இஸ்ரேலின் ஈழட் துறைமும் மீது நடத்தியுள்ளது.இரண்டு ஆள் இல்லா விமானங்களை ஈராக் குழு அனுப்பிய நிலையில், முதல் ஆள் இல்லா விமானம் துறைமுகத்தை துல்லியமாக தாக்கியுள்ளது. இதனால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. துறைமுக வளாகம் கடும் சேதம் அடைந்த காட்சிகளை ஆக்கிரமிப்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.இந்தத் தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்ததாகவும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் ஆக்கிரமிப்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே ஹிஸ்புல்லா ஜெனரல், ஹசன் நஸ்ருல்லாவிற்கு, ஈராக்கின் காத்திப் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நீங்கள் ஆயிரம் பேரை இழந்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் லட்சம் பேர் உங்களது உத்தரவுக்காக காத்திருக்கிறோம். எங்களது மனித வளம், ஆயுதங்கள், செல்வம், வாழ்க்கை, உயிர் அனைத்தும் உங்களது இறை வழிப் பயணத்திற்கு அர்ப்பணம். என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக புதன்கிழமை காலை, ஈராக் குழு நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதலில் இஸ்ரேலின் நெகவ் பாலைவனப் பகுதியில் உள்ள இஸ்ரேலின் “Ein Yahav” ராணுவத் தளம் கடும் சேதம் அடைந்தது. அதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button