உலகம்

பாலஸ்தீனியர்களுக்கு திடீர் தடை விதித்த மைக்ரோசாஃப்ட்!

பாலஸ்தீனியர்களுக்கு திடீர் தடை
மைக்ரோசாஃப்ட் மீது புகார்

தங்களது இமெயில் கணக்குகளை முன் அறிவிப்பு இன்றி முடக்கியுள்ளதுடன், பிற சேவைகளையும் மைக்ரோ சாஃப்ட் துண்டித்துள்ளதாக அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “ஸ்கைப்” மூலம் பாலஸ்தீனத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பேச முடியாதவாறு முடக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் தங்களது சேவை நிபந்தனைகளை மீறிய பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் விளக்கம் அளித்துள்ளது. பிராந்தியத்தை அளவு கோலாக வைத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

காசா மற்றும் மேற்கு கரையில் உள்ள உறவினர்களிடம் பேசுவதற்கு உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீனியர்கள் ஸ்கைப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த வாரம், சியோனிசம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என முகநூல் நிறுவனமான மெட்டா உத்தரவிட்டது. இது இஸ்ரேல் எதிர்ப்பாளர்களை கடும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மைக்ரோசாஃப்டின் இந்த நடவடிக்கை மூலம் மேற்கத்திய, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்ரேல் ஆதரவு மனநிலையுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button