உலகம்

ராணுவத்தை மிரளவைத்த லாரி ஓட்டுநர்!

இஸ்ரேல் ராணுவத்தை மிரள வைத்த ஜோர்டான் லாரி ஓட்டுநர்…
கைத்துப்பாக்கி மூலம் தாக்குதல்…
3 இஸ்ரேலிய போலீசார் பலி…

ஜோர்டான் – மேற்குகரை எல்லையில் சோதனையில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பு போலீசாரை குறிவைத்து, லாரி ஓட்டுநர் ஒருவர் நடத்திய அதிரடித் தாக்குதல் இஸ்ரேலை உலுக்கியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் இனப்படுகொலைகள் அரபு நாட்டு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் அதன் ஆட்சியாளர்கள் இஸ்ரேல் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

ஜோர்டானில் இருந்த சரக்கு லாரிகள் மேற்குகரைக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் லாரிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்புவார்கள். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த போது, ஒரு லாரி ஓட்டுநர், திடீரென தனது கைத் துப்பாக்கியை எடுத்து, ஆக்கிரமிப்பு போலீசாரை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆக்கிரமிப்பு போலீசார் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த மோதலில் அங்கு குழுமியிருந்த பிற ஆக்கிரமிப்பு படையினர் அந்த ஓட்டுநரை சுட்டுக் கொலை செய்தனர்.
இந்தச் சம்பவம் இஸ்ரேலை கடுமையாக உலுக்கியுள்ளது. கடந்த வாரம் மேற்கு கரையில் மக்மூத் அப்பாசின் முன்னாள் பாதுகாவலரால் 3 இஸ்ரேலிய ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொல்லப்பட்ட ஜோர்டான் ஓட்டுநரின் பெயர் மஹர் அல் ஜெசி என்றும், அவரை “ரத்த சாட்சியாக” அறிவித்த ஹமாஸ் இயக்கம், அவருக்காக போர்களத்தில், போராளிகள் இறுதித் தொழுகை நடத்துவர்கள் என குறிப்பிட்டுள்ளது.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button