இந்தி திணிப்பை விரட்டி அடிப்போம் – சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் உறுதி!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர ஐ.டி. துறை அமைச்சருமான நாரா லோகேஷ் கூறிய கருத்துக்கள், பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. காரணம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கிறது. அவர்களின் ஆதரவில் தான் மத்தியில் பாஜக ஆட்சியே நடக்கிறது. இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.இந்தியாவின் பன்முகத் தன்மை எந்த திணிப்பையும் அனுமதிக்காது. ஒவ்வொரு மாநிலமும் தனித் தன்மை வாய்ந்தவை. அந்த மாநிலங்கள் தங்களது சொந்த மொழிகளை வளர்க்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்தியா முழுவதும் ஒரு போதும் இந்தியை திணித்து விட முடியாது என்று நான் நம்புகிறேன். மும்மொழிக் கொள்கை என்பதைத் தாண்டி, இந்திய மாணவர்கள் ஜெர்மன், ஜாப்பனிஸ் போன்ற மொழிகளை கற்க வேண்டும்.
ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக செவிலியர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.செவிலியர்களுக்கு ஜெர்மனி மற்றும் ஜாப்பனிஸ் கற்றுக் கொடுக்க ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற உள்ளோம்.எனது கேள்வி, நான் ஐதராபாத்தில் வசிக்கிறேன். எனக்கு இந்தி நன்றாகத் தெரியும். ஆனால் ஏன் தெலுங்கு வட இந்தியாவில் கற்றுத் தரப்படவில்லை. பல மொழிகளை கற்பது நல்லது என்றால் வட இந்தியர்களுக்கு ஏன் தெலுங்கு கற்றுத் தரப்படவில்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.