இந்தியா

அம்பானி திருமணத்தை புகழ்ந்து செய்தி போட்டால் லட்சக்கணக்கில் பணம்! யூ டியூபர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக முகேஷ் அம்பானி குடும்பம் சுமார் 5000 கோடி ரூபாய் செலவு செய்தனர்.இது உலகம் முழுவதும் பேசப்பட்டாலும், இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஒரு திருமணத்திற்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்ற கேள்விகளும் எழுந்தன.அதே நேரம் அம்பானி திருமணத்தால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உயரும், வெளிநாட்டு விருந்தினர்கள் இந்தியா மீது நல்ல எண்ணம் கொள்வார்கள் போன்ற கருத்துக்களும் ஊடகங்களிலும், யூ டியூப் சேனல்களிலும் பரப்பப்பட்டன.இந்தச் சூழலில், அம்பானியின் ஆடம்பரத்தை மறைத்து, அதனை நேர்மறையாக சித்தரிக்க, யூ டியூபர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக வட இந்திய பெண் யூ டியூபரான காவ்ய கர்னடக் என்பவர் பரபரப்பு புகாரை எழுப்பியுள்ளார்.

அம்பானி குழுவினர் தன்னையும் அணுகி, 3.6 லட்சம் ரூபாய் பணம் தருவதாக பேசியதாகவும், ஆனால் தான் அதனை வாங்க மறுத்து, அப்படி ஒரு கன்டென்டை வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.வழக்கமாக பணம் பெற்றுக் கொண்டு நிறுவனங்களையும், ப்ராடக்டுகளையும் பிரமோட் செய்வது தான் தனது வேலை என்று தெரிவித்துள்ள காவ்யா, ஆனால் அம்பானி திருமண கன்டென்ட், தனக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.தனது குடும்பத்தினர் கூட, பணத்தை வாங்கிக் கொண்டு, அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டு, அவர்களை புகழ்ந்து பேசச் சொல்லி வலியுறுத்திய நிலையிலும் தான் அப்படி செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.தனது கன்டென்டுகள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், அதிக போலித் தன்மை இருக்கக் கூடாது என்பதற்காக அந்த வாய்ப்பை மறுத்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button