உலகம்

உலகின் மிக உயர்ந்த கட்டிடம் ஜெட்டா டவர் – ஏன் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை?

கடந்த 14 ஆண்டுகளாக உலகத்தின் உயரமான கட்டிடமாக , துபாயில் உள்ள புருஜ் கலிஃபாவே இருந்து வருகிறது. இதனுடைய உயரம் ஏறத்தாழ 830 மீட்டர்.இந்த உயரத்தை முறியடிக்கும் வகையில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரத்தில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ஜெத்தா டவர் என்ற பெயரில், உயரமான ஒரு கட்டிடத்தை கட்ட, கடந்த 2013ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.திட்டமிடப்பட்ட சில நாட்களிலேயே அதனுடைய பணி மிக வேகமாக நடைபெறத் தொடங்கியது.

இந்த கட்டிடத்தை தனித்துவமாக கட்ட உலகில் இருந்து பல கட்டிடக் கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.இறுதியாக புருஜ் கலிஃபாவை கட்டிய (andrain smith) ஆன்ட்ரைன் ஸ்மித்தை கொண்டே இந்த கட்டிடத்தையும் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டிடத்தை கட்டும் ஒப்பந்தத்தை சவுதி பின்லாடன் குரூப்பிடும் ஒப்படைக்கப்பட்டது.இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு 20 பில்லியன் டாலர் செலவாகும் என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1 லட்சத்து 68 ஆயிரம் கோடி. சவுதி இளவரசராக இருந்த அல்-வாலித் பின் தலால் சி.இ.ஓ-வாக இருக்கக்கூடிய கிங்டம் ஹோல்டிங் கம்பெனி, இந்த கட்டுமானத்திற்கான மொத்த செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டது.

2013-இல் இருந்து 2017 வரை ஜெத்தா டவரின் கட்டிட பணிகள் மிக வேகமாக நடைபெற்றது. அடித்தளத்திலிருந்து 252 மீட்டர் உயரம் வரை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருந்து. இந்த சூழலில் 2017 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் திடீரென பல அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.கிங்டம் ஹோல்டிங் கம்பெனியின் சி.இ.ஓ-வான இளவரசர் அல்-வாலித் பின் தலாலும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் பின்லேடன் குரூப் நிறுவனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

இதனால் கட்டுமானத்திற்கு தேவையான பொருளாதாரம் சிறிது சிறிதாக குறைந்து 2018ல் மொத்தமாகஜெத்தா டவர் கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. பின்பு கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த ப்ராஜெக்ட் குறித்து யாருமே கவலை கொள்ளவில்லை.சவுதி அரேபியாவின் ஜெத்தா டவர் கட்டப்பட்டால் அது புருஜ் கலிஃபாவை விட உயரமானதாக மாறிவிடும். உலகத்தின் முதல் உயரமான கட்டிடம் என்ற பெயரை சவுதி தட்டிச் சென்று விடும் என்பதால் அதை சமாளிக்கும் வகையில் துபாய் 1300 மீட்டர் உயரத்தில் கீரிக் டவர் என்ற ஒரு கட்டிடத்தை ஜெத்தா டவருக்கு போட்டியாக கட்ட முடிவு எடுத்தது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு ஜெத்தா டவர் நிறுத்தப்பட்டதால் கிரீக் டவர் பணிகளும் நிறுத்தப்பட்டது. ஜெத்தா டவர் அமைய இருக்கும் இடத்தை சுற்றி 5.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஜெத்தா எக்கனாமிக் சிட்டி என்ற ஒரு நகரத்தையே, சவுதி உருவாக்கி வருகிறது.இதன் மொத்த செலவு 20 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜெத்தா டவரின் பணிகள் நின்று இருந்தாலும் ஜெத்தா எக்கனாமிக் சிட்டியின் பணிகள் இதுவரை எந்தச் தடையும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாகவே கூறப்படுகிறது. இதன் முதல் பகுதி பயன்பாட்டிற்கு வரும் பொழுது 30 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.செங்கடலில் இருக்கக்கூடிய ஜெத்தா நகரம் வளர்ச்சி அடைந்தால் , துபாய்க்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் ஜெத்தா நகர் நோக்கி செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.ஐரோப்பியாவில் இருந்து பனாமா கால்வாய் வழியாக ஆசியாவிற்கு வரக்கூடிய கப்பல்களுக்கு துபாயை விட ஜெத்தா நகரமே மிக நெருக்கமான ஒன்றாக இருக்கிறது.

துபாயில் கிடைக்கும் வசதிகள் ஜெத்தாவிலேயே கிடைக்கப் பெற்றால் துபாயின் பொருளாதாரத்தில் பெரிய சேதாரம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் சவுதிக்கும், துபாய்க்கும் நடக்கும் இந்த போட்டியில் சவுதி ஜெத்தா டவர் கட்டுவதில் இருந்து பின்வாங்காது என்றே கூறப்படுகிறது.இதனால் பின்லேடன் குரூப்பிற்கு பதிலாக வேறொரு காண்ட்ராக்ட் நிறுவனத்தை வைத்து, புதிய முதலீட்டாளர்களை ஈர்த்து இந்த கட்டிடத்தை சவுதி கட்டி முடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக சவுதி அரேபியா, சைனா, ஃதென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.ஜெத்தா டவர் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் துபாயின் கிரீக் டவர் பணிகளும் மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிரீக் டவர் என்னதான் 1300 மீட்டர் உயரமாக இருந்தாலும், அது ஒரு முழுமையான கட்டிடமாக இருக்காது. 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கட்டிடமாக இருக்கும் மீதம் உள்ள பகுதிகள் இந்த டவறை தாங்கி நிற்கும் இரும்பு அமைப்புகளாக மட்டுமே இருக்கும்.இதனால் கிரீக் டவர் கட்டப்பட்டாலும் முழுமையான கட்டிடமாக இருக்கும் ஜெத்தா டவரே உலகின் உயரமான கட்டிடமாக அமையும் என்று கூறப்படுகிறது.ஜெத்தா டவரின் கட்டிடக்கலைஞர் ஆன்ட்ராய்ன் ஸ்மித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும் போது இப்போது இருக்கும் அடித்தளத்தை வைத்தே ஜெத்தா டவரை 1600 மீட்டர் உயரம் வரை அதாவது ஒன்றரை கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கட்ட முடியும் என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button