உலகம்

இஸ்ரேலால் இடைமறிக்க முடியாத ஷாகெத் 101 ஆள் இல்லா விமானங்கள் – அறிமுகம் செய்த ஹிஸ்புல்லா!

ஹிஸ்புல்லா அறிமுகம் செய்துள்ள ஷாகெத் 101 ஆள் இல்லா விமானங்கள்…
இடைமறிப்பது கடினம் என இஸ்ரேல் ராணுவம் கவலை…

ஹிஸ்புல்லா கடந்த வியாழக்கிழமை நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என இஸ்ரேல் ஊடகங்கள் நடத்திய ஆய்வில் ஒரு உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

வானில் அதிக உயரத்தில் பறந்துவந்து தாக்கும், ஏவுகணைகள், ஆள் இல்லா விமானங்களை கண்டறிந்து, இடைமறித்து, சுட்டு வீழ்த்துவதில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வான்படைகள் திறமை வாய்ந்தவை. ஐயன் டோம் உள்ளிட்ட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்துள்ளனர்.

ஆனால் குறைவான உயரத்தில் வந்து தாக்கும் ஆள் இல்லா விமானங்களை அவர்கள் தடுப்பது, நடைமுறைச் சாத்தியம் குறைந்ததாகவும். இதனை கண்டறிந்து, ஹிஸ்புல்லா உருவாக்கிய ஆயுதம் தான், ஷாகெத் 101 ஆள் இல்லா விமானம்.
இந்த விமானம், குறைந்த உயரத்தில் பறந்து வந்து, இலக்கை சரியாக கண்டுபிடித்து, பின்னர் தாக்கும் சக்தி கொண்டது.

சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து வந்து, 10 கிலோ கொண்ட வெடி மருந்துகளை சுமந்து வந்து தாக்கும் திறன் படைத்தவை. இந்த ஆள் இல்லா விமானங்கள் ஈரான் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆள் இல்லா விமானம் மூலமாகவே ஹிஸ்புல்லா, வியாழக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரரை பழி தீர்த்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விமானத்தை கண்டறிவதும், இடைமறிப்பதும் சவாலானது என ஆக்கிரமிப்பு ராணுவ அதிகாரிகள் சிலர் அந்நாட்டின் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

அபாபீல், மொஹஜர், யாசர், ஷகெத் 101, ஷகெத் 129 போன்ற பல வகையான ஆள் இல்லா விமானங்களை ஹிஸ்புல்லா வைத்துள்ளது. இதில் பல விமானங்கள் லெபனானில் வைத்து ஹிஸ்புல்லா உருவாக்கியுள்ள அதன் சொந்த தயாரிப்புகள் ஆகும்.
பல டிரோன்கள் ஈரான் உதவியுடன் உருவாக்கப்பட்டவை.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button