உலகம்

இஸ்ரேல் அணி பங்கேற்கும் போட்டிக்குத் தடை – பெல்ஜியம் அறிவிப்பு

இஸ்ரேல் அணி பங்கேற்கும் போட்டிகளை நடத்த முடியாது என பெல்ஜியம் அறிவிப்பு…
போராட்டங்கள் வெடிக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்களை காட்டி முடிவு…

செப்டம்பர் 6 ஆம் தேதி பெல்ஜியத்தில் நடைபெறும் கால்பந்து போட்டியில் இஸ்ரேல் அணி பங்கேற்கிறது. இந்தப் போட்டிகளை நடத்த முடியாது என Belgian Football Federationஅறிவித்துள்ளது.

கடந்த மாதம் புருசெல்ஸ் நகரில் இஸ்ரேல் அணி பங்கேற்க இருந்த போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தப் போட்டியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் உள்ள எந்த நகரமும் இஸ்ரேல் போட்டிகளை நடத்துவதற்கு முன்வரவில்லை. இஸ்ரேல் அணி பங்கேற்கும் போட்டிகளை நடத்துவதில், பெரும் பாதுகாப்பு சவால்கள் இருப்பதாக பெல்ஜியம் கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா மீது 284வது நாளாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக சுமார் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உலக அரங்கில் இஸ்ரேலுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதனால் உலக அரங்கில் புறக்கணிக்கப்பட்ட நாடாக இஸ்ரேல் மாறி வருகிறது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button