உலகம்

முழுமையாக மூடப்படும் இஸ்ரேலின் முக்கியத் துறைமுகம் “ஈழட்”! பல ஆயிரம் கோடி நட்டம்!

ஏமன் ஹவுத்திக்களின் தொடர் நடவடிக்கையால் மூடப்படும் ஈழட் துறைமுகம்…
நட்பு நாடுகள் பலத்தை இழந்து விட்டதாக துறைமுக நிர்வாகம் குற்றச்சாட்டு…

கடல்வழியாக வெளி உலக வர்த்தகத்தை மேற்கொள்ள இஸ்ரேலுக்கு இரண்டு இடங்கள் உள்ளன. ஒன்று மத்திய தரைக்கடல், மற்றொன்று, செங்கடல் வழியாக செல்லும் அகாபா வளைகுடா. மத்திய தரைக்கடல் வழியாக மட்டுமே கடல் வாணிபம் செய்யப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகு, தென் பகுதியில், அகாபா வளைகுடாவில் ஏற்கனவே இருந்த அரபு நகரத்திற்கு ஈழட் என பெயர் மாற்றி, அங்கு துறைமுகத்தை கட்டி எழுப்பினர்.

தற்போது, இந்த துறைமுகம் தான் முக்கிய கடல் வாணிப தளமாகவும், சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது.
இதற்கு மிக முக்கிய காரணம், இந்த ஈழட் நகர கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகளை பார்க்கலாம்.

இந்த நிலையில், இந்த ஈழட் துறைமுகத்தை குறிவைத்து, ஈரான் ஆதரவு படைகளான, ஏமன் ஹவுத்திக்கள், ஈராக் குழுக்கள், பக்ரைன் குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. குறிப்பாக செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு எந்த கப்பலும் செல்லக் கூடாது என ஏமன் ஹவுத்தி படைகள் கடல் நடவடிக்கையை கடந்த 9 மாதங்களாக நடத்தி வருகின்றனர்.

இதனால் ஈழட் துறைமுகத்தில் 85 சதவீத வர்த்தகம் முடக்கப்பட்டு விட்டதாகவும், 50 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு துறைமுக நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், டெல் அவிவில் நடைபெற்ற பொருளாதார அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ஈழட் துறைமுக உயர் அதிகாரிகள், துறைமுகம் முழுமையாக மூடப்படுவதற்கு காரணம், நிர்வாகம் அல்ல, இஸ்ரேல் கூட்டுப்படைகள், கடற்பரப்பை பாதுகாக்க தவறி விட்டதே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் மூலம் ஈழட் துறைமுகம் முழுமையாக முடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த துறைமுகம் வழியாக, இந்தியா, சீனா நாடுகளிடம் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்டது. அதே போல் அந்த இரண்டு நாடுகளுக்கும் சாக்கடலில் இருந்து, பொட்டாசியம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இவை அனைத்தும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button