இஸ்ரேலின் கோலன் குன்று சம்பவம் – ஹிஸ்புல்லா மறுப்பு!

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ட்ரூஸ் மதத்தினர் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா, இது இஸ்ரேலின் சதித் திட்டம் எனக் குறிப்பிட்டுள்ளது.கோலன் குன்றுகளில் ஒரு பகுதியை சிரியாவிடம் இருந்து இஸ்ரேல்ஆக்கிரமித்தது. அங்கு பூர்வீகமாக ட்டூஸ் என்ற மதத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இஸ்ரேல் குடிமக்களாக கருதப்பட்டு, இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள Majdal Shams என்ற பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கு ஹிஸ்புல்லா தான் காரணம் என இஸ்ரேல் குற்றம்சாட்டி, லெபனான் நகரங்கள் மீது கொலைவெறித் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் இது இஸ்ரேலின் திட்டமிட்ட சதி என்றும், போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு, இஸ்ரேல் குற்றம்சாட்டுவதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ஹிஸ்புல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ நிலைகள் மட்டுமே தங்களது இலக்கு என்றும், பொதுமக்களின் இலக்குகளை தாங்கள் இதுவரை குறிவைக்கவில்லை என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.இஸ்ரேல் மீது இதுவரை சுமார் 6000 மிசல்ஸ்களை ஹிஸ்புல்லா வீசியுள்ளது. இவை பெரும்பாலும் ராணுவ இலக்குகளை குறிவைத்தே வீசப்பட்டுள்ளன.இந்த நிலையில், இந்த தாக்குதல், இஸ்ரேலின் ஐயன் டோமில் ஏற்பட்ட தவறு காரணமாக நடந்திருக்கலாம் என சுதந்திர விசாரணை அமைப்புகள் கூறியுள்ளன.இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என ஐ.நா மன்றத்திலும் ஹிஸ்புல்லா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.