உலகம்

“ஏமன் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முட்டாள்தனமானது” நிச்சயம் பதிலடி கிடைக்கும் – ஹிஸ்புல்லா!

ஏமன் மக்கள் மீதான தாக்குதல்கள் இஸ்ரேலின் முட்டாள்தனம்
நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா ஆவேசம்…

ஏமன் மீதான அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்தும் தாக்குதலின் தொடர்ச்சி தான், தற்போது இஸ்ரேல் நிகழ்த்தி இருக்கும் தாக்குதல் என ஹிஸ்புல்லா கூறியுள்ளது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் நடத்தி இருக்கும் இந்த தாக்குதல், பிராந்திய போரில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களை பாதுகாப்பதில், எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் ஏமன் மக்கள் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்கா உதாரணமாக இந்த தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. ஏமனின் கவுரமிக்க மக்கள் அதன் அறிவுப்பூர்வமான தலைமைக்கு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படாமல், கடந்து செல்ல மாட்டோம். என ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இதே போல் பாலஸ்தீன போராளிக்குழுக்களும் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளனர்.

பாலஸ்தீன் மக்களுக்காக உயிர் தியாகம் செய்துள்ள சகோதர ஏமன் மக்களின் நடவடிக்கைகள் வீண் போகாது என்றும், இது தங்களது போராட்டத்திற்கு உத்வேகமாக அமையும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஏமன் மக்களின் தைரியம் மற்றும் உறுதியை பாலஸ்தீனியர்கள் பராட்டுகிறோம் என்றும், பிற இஸ்லாமிய நாடுகளும் இதனை கண்டிக்க வேண்டும் என்பதோடு, அல் அக்ஸா புனித பள்ளியை மீட்க முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக அணி திரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது ஹமாஸ் அமைப்பு.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button