உலகம்

போர்ச்சுக்கல் நாட்டிற்கு அகதிகளாக படையெடுக்கும் இஸ்ரேலியர்கள்!

உலகம் முழுவதும் இருந்து பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தவர்கள் தான் பின்னர் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர். தற்போது, 10 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள், மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக புறப்படத் தொடங்கியுள்ளனர்.

இது இஸ்ரேலின் இருப்பு, சிந்தனையை கேள்விக்குறியாக்கியுள்ளது.இதுகுறித்து, ஆக்கிரமிப்பு ஊடகமான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்தியில், போர்ச்சுகல் நாடு, இஸ்ரேலியர்களுக்கு உடனடியாக அகதிகள் அந்தஸ்து வழங்குவதால், அங்கு ஆயிரக்கணக்கில் குவிந்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகதிகள் விவாகரத்திற்கான வழக்கறிஞர் Nufar Bar என்பவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், போர்ச்சுகலில் அகதிகள் அந்தஸ்து பெறுவது எப்படி என நாள்தோறும் விசாரணை அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.போர்ச்சுக்கல் விமான நிலையத்திற்கு வந்திறங்கி, இஸ்ரேல் நாட்டின் குடியுரிமையை காட்டி, அகதி அந்தஸ்து தேவை என்று சொன்னால், சில மணி நேரங்களில் அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இடம், வேலைவாய்ப்பு, உணவு, குழந்தைகளுக்கு கல்வி ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சில மாதங்களில் பிற சரிபார்ப்புகள் முடிந்து, நிரந்தர அகதி அந்தஸ்து வழங்கப்படும் என கூறியுள்ளார்.

கடந்த 10 மாதங்களில் சுமார் 5000 பேர் இப்படி அகதி அந்தஸ்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் போர்ச்சுகள் அரசு இதுகுறித்த எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.காசா எல்லை நகரங்கள், லெபனான் எல்லைகளில் இருந்து வெளியேறியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், அந்நாட்டின் மைய நகரங்களில், ஹோட்டல்களில் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு உணவுக்கு தேவையான பணத்தை இஸ்ரேல் அரசே வழங்கி வருகிறது.

ஆனால் தொடர்ந்து போர் நீண்டு கொண்டே செல்வதாலும், போர் முடிந்தாலும், தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், ஆக்கிரமிப்பு செட்டிலர்கள் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button