உலகம்

மேற்குகரையில் சிதறிய இஸ்ரேல் படை – குறிவைத்து தூக்கிய பாலஸ்தீனியர்கள்!

காசாவைப் போல் அல்லாமல் மேற்குகரை என்பது, முழுக்க முழுக்க இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீன பகுதி ஆகும்.இங்கு அடிக்கடி நுழையும் இஸ்ரேல் படைகள், பாலஸ்தீனியர்களை கொல்வது, கைது செய்வது, போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.மேற்கு கரையில், இஸ்ரேலிய செட்டிலர்ஸ்கள் எனப்படும் யூத தீவிரவாதிகள் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான நிலங்களை தொடர்ந்து அபகரித்து வருகின்றனர்.இந்த நிலையில் காசாவைப்போல் மேற்குக்கரையிலும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை பாலஸ்தீன போராளிக்குழுக்கள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜெனின் என்ற நகரத்திற்குள் புகுந்த இஸ்ரேல் படையை பாலஸ்தீனிய குழுக்கள் துவம்சம் செய்துள்ளன. இஸ்ரேல் கவச வாகனம் ஒன்று கன்னிவெடியில் சிக்கி, சின்னபின்னமானது. அதில் இருந்த 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அவர்களை மீட்பதற்காக பிற வாகனங்களில் 10க்கும் மேற்பட்டஇஸ்ரேல் படையினர் அங்கு குவிந்தனர். அப்போது, மற்றொரு குண்டு வெடித்துச் சிதறியதில், அவர்கள் அனைவரும், படுகாயம் அடைந்தனர். இதில் கேப்டன் பதவியில் உள்ள ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிறர் மிதமான காயங்களை அடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வழக்கமாக இஸ்ரேல் ராணுவ வாகனங்கள் செல்வதற்கு முன்பு, புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலைகளை பறித்துக் கொண்டு வெல்லும். காரணம் கன்னிவெடிகள் இருந்தால், முன்கூட்டியே அதனை கண்டுபிடிப்பதற்காக இவ்வாறு செய்யப்படும். ஆனால், இந்த முறை பாலஸ்தீன குழுக்கள் மிகவும் ஆழமாக நிலத்தை தோண்டி வெடிகளை வைத்திருக்கலாம் என இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.இந்த வெடிகள், ஒயர்கள் மூலமாகவோ, அல்லது ஒயர்லஸ் மூலமாக வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button