இஸ்ரேல் ராணுவத்தின் ஈடன் அலெக்ஸாண்டர் – ஏன் இவரது விடுதலை முக்கியத்துவம் பெறுகிறது?

அமெரிக்க, இஸ்ரேல் இரட்டை குடியுரிமை பெற்றவரான ஆக்கிரமிப்பு கோலானி படைப்பிரிவின் ஈடன் அலெக்ஸாண்டர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக ஹமாஸ் அறிவித்திருந்தது. தற்போது, ஹமாசின் பிடியில் இருக்கும் ஒரே ஒரு அமெரிக்க குடிமகனும் இவர் தான்.
பொதுவாக ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தையை போர்க்குற்றவாளி நெதன்யாகு நிறுத்திக் கொண்ட நிலையில், கைதிகளின் எதிர்காலம் குறித்து, அவர்களது உறவினர்கள் அவநம்பிக்கை அடைந்தர்.
இந்தச் சூழலில் தான், அமெரிக்காவின் நேரடி தலையீட்டின் கீழ், கத்தார், எகிப்து, துருக்கி நாடுகளின் மத்தியஸ்தம் அடிப்படையில், ஈடன் அலெக்ஸாண்டரை விடுவிக்க ஹமாஸ் முன் வந்தது. டொனால்டு டிரம்பின் மத்திய கிழக்கு வருகையையொட்டி, நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அலெண்சாண்டர் விடுதலையை தொடர்ந்து, காசாவில் நிவாரண பொருட்கள் விநியோகம் மீண்டும் தொடங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அமெரிக்காவால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடுதலை மீண்டும் கைதிகள் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதே போல், இஸ்ரேலின் கோலானி படைப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக, அந்த படைப்பிரிவின் ஆக்கிரமிப்பு வீரர்கள் ஒருவர் கூட, ஹமாசிடம் கைதியாக இல்லை என்ற புதிய வரலாறு தற்போது உருவாக உள்ளது.
காரணம் கோலானி படைப்பிரிவைச் சேர்ந்த யாராவது, ஒருவராவது குறைந்த பட்சம் ஹமாசிடம் கைதிகளாக இருப்பார்கள். தற்போது, அலெக்சாண்டர் விடுவிக்கப்பட்டால், கோலானி படைப்பிரிவின் ஒரு வீரர் கூட காசாவில் இல்லை என்ற நிலை உருவாக உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஹமாசிடம் இருந்த, கோலானி வீரர் ஓரன் சாவுல் என்பவரின் உடல் கடந்த ஜனவரி மாதம் மீட்கப்பட்டது.
தற்போது ஹமாசிடம் 14 ஆண் இஸ்ரேலிய ராணுவ கைதிகள் உள்ளனர். இவர்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல்கள் காசாவில் வைக்கப்பட்டுள்ளன.
========