தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனைக்குள் ஒளிந்து கொண்ட இஸ்ரேல் படை! மீட்க விரைந்த ஹெலிக்காப்டர்!

309வது நாளாக இஸ்ரேல் படையை எதிர்கொள்ளும் காசா போராளிக்குழுக்கள்…
பல கட்டத் எதிர் தாக்குதல்களை நடத்தியதாக பட்டியல் வெளியீடு…
மருத்துவமனைக்குள் ஒளிந்து கொண்ட இஸ்ரேல் படை…
பெயிட் லெகியா நகரில் காசா போராளிக்குழுக்களின் தாக்குதலில் கடும் பாதிப்பைச் சந்தித்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் அங்குள்ள இந்தோனேஷிய மருத்துவமனைக்குள் சென்று ஒளிந்து கொண்டதாகவும், உயிரிழந்த அல்லது காயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்ல ஆக்கிரமிப்பு ஹெலிக்காப்டர் வந்தததாகவும் அதுகுறித்த வீடியோக்களை ஹமாசின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படை வெளியிட்டுள்ளது.
மேலும் பாலஸ்தீனிய குழுக்கள் சனிக்கிழமை தாங்கள் நடத்திய தாக்குதல் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். கான் யூனிசில் படையெடுப்பு ராணுவத்துக்கு எதிராக வகை ராக்கெட் தொகுப்பு மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. ரபா நகரில் al-Yassin ராக்கெட்டுகள் மூலம் இஸ்ரேலின் military-grade D9 வகை புல்டோசரை தகர்த்ததாக அல் கஸ்ஸாம் கூறியுள்ளது.
ரபாவின் தல் அல் சுல்தான் பகுதியில் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து கடும் போரிட்டதாகவும் ஹமாஸ் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. பெயிட் லெகியாவில், ஆக்கிரமிப்பு படைகளை குறிவைத்து, anti-personnel RPG மற்றும் thermobaric RPG ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதில் ஆக்கிரமிப்பு தரப்பில், உயிரிழப்பு அல்லது படுகாயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளது.
இதனால், அவர்களை தூக்கிச் செல்ல, ஆக்கிரமிப்பு ஹெலிக்காப்படர் வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆக்கிரமிப்பு படை, அருகே இருந்த இந்தோனேஷிய மருத்துவமனைக்குள் புகுந்து, தங்களை தற்காத்துக் கொண்டதாகவும் ஹமாஸ் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
அல் சொவைதா என்ற கிராமத்தில், ஆக்கிரமிப்பு வீரரை, ஹமாசின் ஸ்னைப்பர் வீரர் குறிபார்த்து சுட்டதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.இதே போல் ஆக்கிரமிப்பு படைகளை நெட்சரிம் ஆக்சிஸ் பகுதியில், Haseb-111 ராக்கெட்டுகள் மூலம் தாக்கியதாக அல் முஜாகிதீன் பிரிகேட் என்ற பாலஸ்தீன குழு தெரிவித்துள்ளது.
இதே போல் ரபா அகதிகள் முகாம் அருகே ஆக்கிரமிப்பு படைகள் மீது 60mm mortar ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தியதாக அல் அக்ஸா தியாகிகள் படை அறிவித்துள்ளது.
=====