லெபனான் உடனான போர்நிறுத்தத்தை மீறி வரும் இஸ்ரேல்
தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் அறிவிப்பு

ஹிஸ்பொல்லாவின் பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசிம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதில் அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களுக்கு எதிராக லெபனான் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மூத்த எதிர்ப்புத் தளபதி முஸ்தபா பத்ரெடினின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நீண்ட உரையை நிகழ்த்தினார்.
முஸ்தபா பத்ரெடின் 1982 இல் லெபனானின் கல்தேயில் பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய முக்கிய நபர்களில் ஒருவர்” என ஷேக் காசிம் கூறினார், மறைந்த தளபதியை ஹெஸ்பொல்லாவின் தூண்களில் ஒருவர் என பாராட்டினார். “அவர் தைரியம் மற்றும் தியாகத்தின் சின்னமாக இருந்தார், மேலும் அவரது பாதை தொடர்ந்து எதிரிகளுக்கு அச்சத்தை கொடுத்தது.
இதனிடையே சிரியா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை கடுமையாகக் கண்டிப்பதாக அவர் கூறினார். “நீண்ட காலமாக உறுதியாக நிற்கும் சிரிய மக்களை பாராட்டினார். மேலும் சிரியாவில் இஸ்ரேல் அடைய விரும்பும் நோக்கங்களை தடுக்க அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதலையும் ஷேக் காசிம் கண்டித்தார், பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கு அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்தார். “நெதன்யாகு ஒருபோதும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது,” என அவர் கூறினார். மேலம் அவர்கள் தங்கள் கண்ணியத்தைக் காப்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துள்ளனர், அவர்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என தெரிவித்தார்.
ஹெஸ்பொல்லா தனது நிலைப்பாடுகளில் அசைக்க முடியாத உறுதியை கொண்டுள்ளது.
“நாங்கள் நீதியுடன் நிற்கிறோம், ஒருபோதும் அடிபணியமாட்டோம்,” என ஷேக் காசிம் தெரிவித்தார். “லெபனான் மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தொடர்ந்து இஸ்ரேல் எதிர்ப்போம்.
எங்கள் எதிர்ப்பின் மீள்தன்மை இறுதியில் எதிரியை சோர்வடையச் செய்யும் என தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 3,000 க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் அதை மீறியுள்ளது” எனக் கூறினார்.
மேலும் இஸ்ரேல் விஷயத்தில் லெபனான் அரசு இன்னும் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய மீறல்களை அதிக வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.