இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க கூடாது! பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு ஹமாஸ் வலியுறுத்தல்!

ஓஸ்லோ ஒப்பந்தம் மூலம் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கிகீகரித்து, இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தார், அப்போதைய தலைவர் யாசர் அரபாத். அதனை தற்போதும் பின்பற்றி வருகிறது யாசர் அரபாத்தின் PLO எனப்படும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு. இந்த அமைப்பு தற்போது, மக்மூத் அப்பாசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அதே நேரம் பாலஸ்தீன் என்ற தனிநாட்டை ஏற்றுக் கொள்வதாக அப்போதைய இஸ்ரேல் தலைவர்களும் ஓஸ்லோ ஒப்பந்தம் மூலம் தெரிவித்தனர். ஆனால் எல்லைகள் வகுக்கப்படவில்லை.
இந்த நிலையில், பாலஸ்தீன் தனி நாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது, என இஸ்ரேலின் நெசட் எனப்படும் பாராளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதனை கண்டித்துள்ள பாலஸ்தீன போராளிக் குழுக்கள், இஸ்ரேலை தனி நாடாக கருதும் PLO அமைப்பு அந்த முடிவில் இருந்து பின்வாங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்த தெரிவித்துள்ள ஹமாஸ், மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற பாலஸ்தீன் போராளிக்குழுக்கள், இஸ்ரேல் நாடாளுமன்ற தீர்மானத்துக்கு பதிலடியாக PLO அமைப்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் தற்போது, PLO அமைப்பும், அதன் தலைவர் மக்மூத் அப்பாசும், சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருப்பதாக கூறப்படுகிறது.
====