இது வெறும் தொடக்கம் தான்! இனித் தான் இஸ்ரேல் கவனமாக இருக்க வேண்டும்! ஏமன் படை எச்சரிக்கை!

இஸ்ரேல் இனி கவனமாக இருக்க வேண்டும்…
அடுத்தடுத்து முக்கிய நகரங்களை தாக்க உள்ளதாக ஏமன் படைகள் அறிவிப்பு…
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மீது, கண்டறிய முடியாத ஆள் இல்லா விமானம் மூலம் ஏமன் ஹவுத்திப் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து லெபனானின் அல் மயாதீன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ஹவுத்திப்படைகளின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் Hazam al-Assad கூறியுள்ளதாவது, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடரும் வரை, அதன் ஒவ்வொரு நகரங்களும் இதே பாணியில் தாக்கப்படும். இஸ்ரேல் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும்.
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாங்கள் புதிய கட்டத்தை அடைந்துள்ளோம். பாலஸ்தீன், லெபனான், ஈராக்கில் உள்ள குழுக்களோடு இணைந்து, நாங்கள் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஏமன் படைகளின் ஆள் இல்லா விமானத்தை, தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்ததாகவும், ஆனால் மனித தவறு காரணமாக அதனை சுட்டு வீழ்த்த முடியாமல் போனதாக ஒரு காரணத்தை இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளதாக, அந்நாட்டு ஊடகமான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
New footage shows the Houthi drone attack on Tel Aviv early this morning. pic.twitter.com/aEuF8cjIwU
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) July 19, 2024
இந்த தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவா யாயிர் லாபித், (Yair Lapid)
நெதன்யாகு அரசாங்கத்தால், இனி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பதற்கான இன்னொரு உதாரணம் தான் இந்தத் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலும், தெற்கிலும், இஸ்ரேலியர்களை பாதுகாக்க முடியாதவர்கள், தற்போது, டெல் அவிவ் நகரத்திலேயே பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டனர் என நெதன்யாகுவை கடுமையாக சாடியுள்ளார்.
==