ஆழம் தெரியாமல் காலை விட்டு அலறும் இஸ்ரேல்…!

நேற்றைய தினம் ஆபரேஷன் ரைசிங் லைன் என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. ஈரான் ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி திட்ட நிலையங்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 78 ஈரானியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 320 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேலுடைய வாழ்வாதாரத்திற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியெடுக்க தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை எனவும், ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரேலுடைய பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து தற்பொழுது இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் மீது 150 ஏவுகணங்களை வீசி ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுடைய டெல்வின் ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குடிவைத்து ஈரான் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானுடைய தாக்குதலல் டெல் அவின் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகி இருப்பதாகவும் 34 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைதூர இலக்கை தாக்கி அளிக்கும் ஏவுகனை கொண்டு ஈரான் பதில் தாக்குதலை தற்பொழுது மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் தலைநகர டெல்அவிவ் மற்றும் இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களான ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது 12 மணி நேரமாக ஈரான் தாக்குதல் நடத்து வருவதாக கூறப்படுகிறது. ஈரானுடைய பதில் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் முழுவதுமே சைரன் ஒலித்து வருகின்றன.
அதாவது தொடர்ச்சியாகவே தற்பொழுது இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகிறது என்பது ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானுடைய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் இன்று தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ஈரானுடைய தலைநகரான தெஹ்ரானைக் குறி வைத்து இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடக்க உள்ள சம்பவத்தால் மத்திய கிழக்கு நாடுகள்ல் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.