உலக அளவில் புறக்கணிக்கப்படும் இஸ்ரேல் – உறவை துண்டித்த பார்சிலோனியா!
உலக அளவில் புறக்கணிக்கப்படும் இஸ்ரேல் – உறவை துண்டித்த பார்சிலோனியா!

இஸ்ரேல் உடனான நட்புறவை துண்டிப்பதாக பார்சிலோனியா அறிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் போர்குற்றங்களை எதிர்க்கும் வகையில், சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இஸ்ரேல் செயல்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பார்சிலோனியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் அரசு உடனான நிர்வாக உறவுகள், டெல் அவிவ் நகர நிர்வாகம் உடனான நட்புறவு ஒப்பந்தம் ஆகியவை துண்டிக்கப்படுவதாக பார்சிலோனியா கூறியுள்ளது.
பாலஸ்தீனியர்களின் சட்ட உரிமை நிலைநாட்டப்படும் வரை, இஸ்ரேல் உடன் அனைத்து உறவுகளையும் துண்டிப்பது என பார்சிலோனியாவை ஆளும் இடதுசாரி, சோசலிச கட்சிகள் தீர்மானத்தை முன்மொழிந்து, வெற்றியடையச் செய்துள்ளன.
பார்சிலோனியாவில் நடைபெறும் ஆயுத கண்காட்சியில் இஸ்ரேல் நிறுவனங்களுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடுமைகள், அந்நாடு உடனான எந்த உறவையும் மேற்கொள்வதில் இருந்து நம்மை தடுக்கிறது.ஏற்கனவே இருந்த பார்சிலோனியா நகர நிர்வாகம் இதே போன்ற முடிவை எடுத்த நிலையில், தேர்தலில் வென்ற புதிய நிர்வாகம் அதனை நிறுத்தி வைத்தது. தற்போது புதிய நிர்வாகமும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
ஸ்பெயினின் 2வது பெரிய நகரமும், உலக புகழ்பெற்ற கால்பந்து நகரமான பார்சிலோனியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீதான சர்வதேச புறக்கணிப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.