உலகம்

அப்பாவிகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய ஹமாஸ்!

இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வதாக ஹமாஸ் அறிவிப்பு…
காசா மீதான இனப்படுகொலை தொடர்வதால் நடவடிக்கை…

ஹமாஸ் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், தனது தாக்குலை கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

காசாவில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் வெளியேறினால் மட்டுமே பேச்சுவார்த்தை என கூறி வந்த ஹமாஸ், தற்போது, அந்த நிபந்தனையை தளர்த்திவிட்டது. ஆனாலும் இஸ்ரேலிய படைகள் காசாவின் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அல் மாவாசி அகதிகள் முகாம் மீது மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதனை கண்டித்து, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமருக்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்றும், அதனை சீர்குலைக்கவே தொடர்ந்து அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ், இஸ்ரேல் உண்மையிலேயே தங்கள் நாட்டின் கைதிகள் மீது எப்போது, அக்கறை கொள்கிறதோ, அப்போது, மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என த் தெரிவித்துள்ளது. அதுவரை பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதாக, அல் ஜசீரா செய்தி குறிப்பிட்டுள்ளது.

ஹமாசின் இந்த அறிவிப்பு மூலம், இஸ்ரேல் கைதிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெதன்யாகுவிற்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்துவார்கள் என தெரிகிறது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button