எல்லையை கைப்பற்றிய இஸ்ரேல்! வேடிக்கை பார்க்கும் எகிப்து!

Philadelphi Corridor எனப்படும் எகிப்து – காசா எல்லைப் பகுதியை கைப்பற்றி, அங்கு தங்களது நாட்டின் கொடியை இஸ்ரேல் பறக்கவிட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதி தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் என நெதன்யாகு கூறியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தை எகிப்தும் வேடிக்கை பார்த்து வருகிறது.
காசா எல்லையை ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், கடந்த 10 மாத போரின் தொடர்ச்சியாக ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தி, எகிப்து உடனான என்ற Philadelphi Corridor எல்லையை இஸ்ரேல் மே மாதம் கைப்பற்றியது.
இதனை எகிப்து எதிர்த்து வந்தாலும், எந்த ராணுவ நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது, அப்பகுதியில் தொடர்ந்து தங்களது ராணுவம் நிலைநிறுத்தப்படும் நெதன்யாகு அறிவித்துள்ளார். அந்த எல்லை வழியாகத் தான் எகிப்தில் இருந்து ஹமாசுக்கு ஆயுதம் வருவதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எத்தனை நாட்களுக்கு அங்கு இஸ்ரேல் ராணுவம் நிறுத்தப்படும் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை. எகிப்தில் ராணுவ சர்வதிகாரி அப்துல் பத்தா அல்சிசி என்பவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் அமெரிக்காவிடம் நிதிஉதவிகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
====