ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல் – கடும் பதிலடி கொடுக்கப்படும் என அறிவிப்பு!
ஏமன் மீதான தாக்குதல்களை ஹமாஸ் ஒரு திட்டமிட்ட அரசு பயங்கரவாதம் என சாடியுள்ளது

ஏமன் மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களால் அஞ்சி விட மாட்டோம், கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஹவுத்திப் படை திட்டவட்டமாக கூறியுள்ளது.ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளும் பதிலடி குறித்து எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், இதனால் பயந்து விட மாட்டோம் என ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுத்திப்படைகள் தெரிவித்துள்ளன.
ஏமன் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.
ஏமனின் அல்-ஹொடைடா உட்கட்டமைப்பு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஏமனின் ராணுவ அமைப்பான ஹவ்தி படை போரிட்டு வருகிறது.
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல்களை தெறிந்து ஓட விடுவது முதல் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளங்களை ட்ரோன்கள் கொண்டு தும்சம் செய்வது வரை ஏமன் ஹவ்திகள் வான்வழி, கடல் வழி, தரைவழி என மூன்று பக்கமும் கட்டம் கட்டி அடித்து வருகின்றனர்.
இதனிடையே யேமனின் அல்-ஹொடைடா நகரில் உள்ள மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதனை அப்பட்டமான போர் குற்றம் என கண்டித்துள்ள ஹெஸ்புல்லா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆணவத்தை அடக்கவும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் உரிமையைக் காக்கவும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஏமன் மீதான தாக்குதல்களை ஹமாஸ் ஒரு திட்டமிட்ட அரசு பயங்கரவாதம் என சாடியுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக காசாவுடன் துணை நிற்கும் ஏமனை பின்வாங்க வைக்க, நெதன்யாகு அரசாங்கம் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டியுள்ளது.
மேலும் ஏமன் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக ஏமனுடன் இணைந்து நிற்போம் என ஹெஸ்புல்லாவும், ஹமாஸும் அறிவித்துள்ளது உலக நாடுகளை உற்று கவனிக்க வைத்துள்ளது.
=====