உலகம்

ஏமனைப் போல், இஸ்லாமிய நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் – ஓமன் கிராண்ட் முஃப்தி அழைப்பு…!

ஏமன் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த முஸ்லீம் உலகின் மீதான தாக்குதல்…
முஸ்லீம் நாடுகள் ஓரணியில் திரண்டு இஸ்ரேலை தடுக்க வேண்டும்…
ஓமன் கிராண்ட் முஃப்தி அழைப்பு…

ஏமன் நாட்டின் மீதான தாக்குதலுக்கு அண்டை நாடான ஓமன் நாட்டின் தலைமை மார்க்க அறிஞரான, கிராண்ட் முஃப்தி ஷேக் அகமது பின் ஹமத் அல் கலிலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பாலஸ்தீனத்தில் உள்ள புனித தலங்களை காக்கவும், பாலஸ்தீனியர்களின் புனித ரத்தம் சிந்தப்படுவதை தடுக்கவுமோ, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை சகோதர ஏமன் படைகள் மேற்கொண்டன.

அதற்காக ஏமன் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடும் அதிர்ச்சியை தருகிறது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் ஏமன் என்ற ஒரு தனி நாட்டின் மீதான தாக்குதல் அல்ல. அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்.

இதனை தடுக்க, ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு பாடம் புகட்ட, பிற முஸ்லீம் நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு ஓமன் கிராண்ட் முஃப்தி, ஷேக் அகமது பின் ஹமத் அல் கலிலி தெரிவித்துள்ளார்.

சவுதி, எகிப்து, ஜோர்டான் நாடுகளில் மன்னர் ஆட்சி அல்லது சர்வதிகார ராணுவ ஆட்சி நடைபெறுவதோடு, அதன் ஆட்சியாளர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நட்புணர்வுடன் இருந்து வருவதால், அங்கு மார்க்க அறிஞர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக சொல்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button