சினிமா
நரபலி வாங்குகிறதா காந்தாரா 2 படப்பிடிப்பு தளம்..??
காந்தாரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க கூடிய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காந்தாரா பாகம் 2 படப்பிடிப்பில் அடிக்கடி விபத்துகளும் அகால மரணங்களும் ஏற்பட்டு வருவதாக படக்குழுவினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்தில் நடிகர் கபில் சௌபர்ணிகா நதியின் மூழ்கி உயிரிழந்தார். அடுத்து ராஜேஷ் புகாரி என்ற நடிகர் மாரடைப்பின் காரணமாக காலமானார். தொடர்ந்து விஜூ வி கே என்ற நடிகர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்.
தற்போது கர்நாடகாவில் ஷிமோகா பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் 30 பேர் கொண்ட பட குழுவினர் படகுப் பயணம் மேற்கொண்டபோது படகு விபத்திற்கு உள்ளானது. இதில் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் ஆழம் குறைவாக இருந்ததால் நீந்தி உயிர் தப்பினர்