அதி நவீன போர் விமானங்கள், ஐயன் டோம் – ரஷ்யாவிடம் வாங்கிக் குவிக்கும் ஈரான்!

அதி நவீன போர் விமானங்கள் முதல் ஐயன் டோம் வரை…
ஈரானுக்கு சப்ளையை தொடங்கிய ரஷ்யா….
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முழு வீச்சில் தயாராகும் ஈரான்…
ரஷ்யாவிடம் இருந்து ஐயன் டோம் கருவிகளை ஈரான் வாங்கிக் குவித்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஒலியை விட பல மடங்கு வேகமாக சென்று தாக்கக் கூடிய பாலிஸ்டிக்ஸ் மிசல்ஸ்கள் மற்றும் டிரோன்கள் தொழில்நுட்பத்தில், ஈரான் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது.
ரஷ்யாவுக்கு பாலிஸ்டிக்ஸ் மிசல்ஸ்கள், டிரோன்களை ஈரான் பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த ஆயுதங்களைத் தான் ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து, போர் விமானங்கள், ஐயன் டோம் கருவிகளை பெற ஈரான் தீவிரம் காட்டி வந்தது.
தற்போது, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்த உள்ள நிலையில், இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பதால், அதற்கு முன்பாக, தங்களது வான் எல்லைகளை முழுமையாக பாதுகாக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே S 300 என்ற வான் பாதுகாப்பை அமைப்பை ஈரான் வைத்துள்ளது. தற்போது அதை விட நவீன வான் பாதுகாப்பு அமைப்பான S 400 எனப்படும் கருவியை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிக் குவித்து வருகிறது ஈரான்.
இதே போல் ரஷ்யாவிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட Su-35 போர் விமானங்களையும் ஈரான் வாங்க உள்ளது. இதற்கான ஆர்டர்களை 2021ஆம் ஆண்டே ஈரான் கொடுத்து விட்ட நிலையில், அந்த ஆயுதங்கள் ஈரானுக்கு வந்து சேர்ந்து விட்டதா, இல்லையா என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை அறிந்த இஸ்ரேல், ஈரானின் ஐயன் டோம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்தி, தங்கள் மீதான தாக்குதலை தடுக்கலாமா என ஆலோசித்தனர். ஆனால் அது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என அஞ்சி, அந்த முடிவை கைவிட்டுள்ளனர்.
ஈரான் இந்த முறை நடத்தும் தாக்குதல், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பெயர் அளவிலான தாக்குதலாக இருக்காது, என்றும் மிகக் கடுமையான தாக்குதலாக இருக்கும் என தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
====